தருமபுரி, அக். 8 – தொப்பூர் வனப்பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கிகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் நாட்டு துப்பாக்கிகள் புழக் கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச் செல்வனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் ஆயுத பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமல் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப் பவர்கள் துப்பாக்கிகளை பொது இடத்தில் வைத்து விட்டு செல்லுங் கள் என்றும் காவல்துறையால் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் துப்பாக்கி வைத்திருப் பது கண்டுபிடித்தால் ஆயுத பாது காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த படு வார்கள் என்று தண்டோரா போடப் பட்டது. இதையடுத்து, தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்பட்டி ஊராட்சி கஸ்தூரி கோம்பை ஆஞ்சநேயர் கோயில் வனப்பகுதியில் நான்கு நாட்டு துப்பாக்கிகள் கிடப்பதாக தொப்பூர் காவல் ஆய்வாளர் யமுனாதேவி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற தொப்பூர் காவல்துறையினர் வனப் பகுதியில் தேடி நான்கு நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றி விசா ரணை செய்து வருகின்றனர். ஏற்க னவே இந்த பகுதியில் 8 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.