districts

நாட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி

கோவை,ஜன.19- கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதி யில் பன்றி வேட்டைக்கு சென்றபோது சட்டவிரோ தமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து வாலி பர் ஒருவர் உயிரிழந்த சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.  கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்த வர் அய்யாச்சாமி (40).  இவர் திங்களன்று இரவு தனது நண்பர்களான பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராம சாமி ஆகியோருடன் வேட் டைக்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அருகி லுள்ள வன பகுதிக்குள் சென் றுள்ளனர்.

அப்பொழுது நண்பர்களில் ஒருவர் வைத் திருந்த நாட்டு துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மலை கிராம மக்கள் வனத்துறையின ருக்கும், காவல் துறையின ருக்கும் தகவல் தெரிவித்த னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி நண்பர்கள் நால் வரையும் பிடித்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

;