districts

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று மற்றும் நாளை கவுன்சிலிங்

திருப்பூர், ஜூன் 7- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஜூன், 8, 9ஆம் தேதிகளில்  இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெ றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்  சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே,  31ல் துவங்கி, ஜூன் 6 வரை நடைபெற் றது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந் நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர்  கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை  யில் கூறியிருப்பதாவது:- 8, 9 ஆம் தேதி களில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும். வணிகவியல் பாடங்க ளான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு  ஜூன், 8ஆம் தேதி காலை, 9:30 க்கும்,  பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம்,  1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். 9 ஆம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பி யல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது.  வேதியியல், விலங்கியல் பாடங்க ளுக்கு காலை, 11:30 மணிக்கும், கணி தம், கணிணி அறிவியல், கணிணி பயன் பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும்  கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட  ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை, விண் ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட் டில் www.cgac.in என்ற கல்லூரியின்  இணையதள முகவரியில் வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப் பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர் கள் அழைக்கப்படுவர். கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட் டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண் டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட் டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல்,  அசல் சான்றிதழ் கொண்டுவர வேண் டும். உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந் தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில்  இருக்கும் இடங்கள் அடிப்படையி லேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல் லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.