districts

img

காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் தர்ணா

நாமக்கல், டிச.30- பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் அமர்ந்து கவுன்சி லர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவ லக வளாகத்திலிருந்த பழைய குடிநீர் இரும்பு குழாய்கள்,  பழுதடைந்த பேட்டரி வாகனங்களின் உதிரிபாகங்களை, இரும்பு வியாபாரி ஆறுமுகம் தலைமையில் 3 பேர், மினி  சரக்கு லோடு வாகனத்தில் ஞாயிறன்று ஏற்றிக்கொண்டி ருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  பேரூராட்சி கவுன்சிலர்கள் இரும்பு குழாய்களை வாகனத் தில் ஏற்றிக்கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து, குழாய்களை  யார் எடுக்க சொன்னது? விடுமுறை நாளில் எவ்வாறு எடுக்க லாம்? என கேட்டுள்ளனர். அப்போது பேரூராட்சி செயல் அலு வலர் சோமசுந்தரம் தான் எடுக்க சொன்னதாக, அவர்கள் தெரி வித்தனர். இருப்பினும் அந்த 3 பேரையும், ஆட்டோவையும்   பர மத்திவேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, ஆய்வாளர்  ராமகிருஷ்ணனிடம் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். அப்போது உரிய முறையில் விசாரணை நடத்தி தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த கவுன்சிலர்கள் 10 பேர், காவல் நிலைய வாசலில் அமர்ந்து தர் ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா சம்பவ  இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கவுன் சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்ற னர்.