districts

img

திருப்பூரில் தெருவிளக்கு பராமரிப்பில் தொடரும் குளறுபடி மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருப்பூர், ஜூலை 31 - திருப்பூர் மாநகரில் தெரு விளக் குகளை பராமரிக்கும் தனியார் ஒப் பந்த நிறுவனம் அலட்சியமாக செயல்படுகின்றனர். பலமுறை பேசியும் இப்பிரச்சனை தொடர்ந்து  கொண்டிருக்கிறது என சரமாரியாக  குற்றம்சாட்டிய அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தினர்.  திருப்பூர் மாநகராட்சி மாமன்ற  கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர் பத்மாவதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  கடந்த கூட்டத்திற்கு பின்பு ஒரு  மாத காலம் நடைபெற்ற வேலை கள் குறித்து மேயர் பேசினார். புதிய  தெருவிளக்குகள் அமைக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 4053 விளக்குகள் எல்இடி விளக் குகளாக மாற்றப்பட்டுள்ளன. 2072  விளக்குகள் புதிதாக பொருத்தப் பட்டுள்ளன. 60 வார்டுகளுக்கு 60  புதிய வாகனங்கள் பெறப்பட்டுள் ளன. நான்கு புதிய பாலம் பணி நடை பெற்று வருகிறது.  தெரு நாய்களை கட்டுப்படுத்து வது சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. கடந்த மாதத்தை விட  குடிநீர் வினியோகம் பெரும் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31க்குள் பணி முடிவடையும். மற்ற பணிகளை மழை காலத்துக்கு முன்பாக முடிப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றோம்.  மாநகராட்சி பள்ளிகளில் 94  வகுப்பறை பணிகளில், 36 வகுப்ப றைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வரும் 12ஆம் தேதி தமிழக முதல் வர் வகுப்பறைகளை பள்ளி மாண வர்களுக்கு ஒப்படைக்கிறார் என்று  கூறினார். இந்தக் கூட்டத்தில், தெருவி ளக்கு பராமரிப்பை மேற்கொண்டி ருக்கும் தனியார் ஒப்பந்த நிறுவ னம், எந்த மாமன்ற உறுப்பினர்க ளின் கோரிக்கைக்கும் செவி சாய்ப் பதில்லை. அலட்சியமாக செயல்ப டுகின்றனர். இப் பிரச்சனை பல முறை பேசியும் தொடர்ந்து கொண் டிருக்கிறது. எனவே தெருவிளக்கு பராமரிப்பை முறைப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வலியுறுத்தினர்.  இதற்கு தனியாக ஒரு கூட்டம் நடத்தி ஏற் பாடு செய்யலாம் என்று மேயர் பதில ளித்தார். அதேபோல் எஸ்யூசி எனப்படும்  குப்பை வரி பிரச்சனையில் 90 சதவி கிதம் நிலுவைத் தொகை வசூலிக் கப்பட்டு விட்டது என்று மேயர் கூறி னார். குப்பை வரி பிரச்சனையில் பெரும் சுமை மக்களுக்கு உள்ளது.  முந்தைய ஆண்டுகளில் போட்ட  குப்பை வரி நிலுவைத் தொகையை  செலுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்  என்றும் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு நடைபாதை வியாபா ரிகள் விதிகளின்படி மாநகர விற் பனைக் குழு அமைக்க வேண்டும்  என்ற தீர்மானத்தில், சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதிகள் தேர் தல் குறித்து மாமன்ற உறுப்பினர் கள் கேள்வி எழுப்பினர். மேலும் மேயர் துணை மேயர் உள்ளிட்ட மக் கள் பிரதிநிதிகள் அதில் இடம்பெற  வேண்டும் என்றும் வலியுறுத்தி னர். நகர்ப்புற சுகாதார நிலையங் கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு  விழா நடத்தி இரண்டு ஆண்டுக ளுக்கு மேலாகியும் இன்னும் மருத் துவர்கள், பணியாளர்கள் போடப் படாதது பற்றி கேள்வி எழுப்பப்பட் டது.  மாவட்ட அளவிலான குழு அங் கீகரித்து விரைவில் நியமிக்கப்படு வார்கள் என்று மேயர் பதிலளித் தார்.  பாதாள சாக்கடை கட்டணம் வசூலிப்பதில் ஒரு சொத்து வரிக்கு இரண்டு மூன்று இணைப்புகள் என்று கட்டணம் வசூலிப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம்  முன்னதாக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாமன்றக்குழு தலை வர் எஸ்.ரவிச்சந்திரன் எழுந்து,  ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பட் ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்க ளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. எனவே இதை கண்டித்து திருப்பூர்  மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.  பின்னர், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிராக சிறப்பு தீர்மானத்தை மேயர் தினேஷ்குமார் முன்மொ ழிந்தார். இதற்கு திமுக, இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒருமனதாக ஆத ரவு தெரிவித்தனர். அதேசமயம் பாஜக உறுப்பினர்கள் இருவர் கூட் டத்தை விட்டு வெளிநடப்பு செய்வ தாக கூறி புறப்பட்டு சென்றனர்.  முன்னதாக அதிமுக உறுப்பி னர்கள் ஆன்லைன் முறையில் கட் டிட அங்கீகாரம் வழங்குவதை வர வேற்பதாகவும், அதேசமயம் அதற் குரிய கட்டணத்தை அதிகரித்தி ருப்பதை கண்டித்தும், சொத்து வரி  உயர்வுக்கு எதிராகவும் வெளி நடப்பு செய்வதாக கூறி வெளியே றினர்.