திருப்பூர், ஜூலை 31 – திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதி களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை, பழுது நீக்குவோர் முறையாக வேலை செய்வ தில்லை என்று மாமன்றக் கூட்டத்தில் கவுன் சிலர்கள் சரமாரியாகப் புகார் கூறினர். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத் தில் கவுன்சிலர்கள் பேசியது வருமாறு: புதிய பேருந்து நிலையம் எப்போது பயன்பாட் டிற்கு வரும் என்று கவுன்சிலர் சேகர் கேள்வி எழுப்பினார். 98 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு பணிகள் மட்டும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்த கூட்டத் திற்கு முன்பாக பணிகள் முடிக்கப்பட்டு திறக் கப்படும் என்று மேயர் பதிலளித்தார். மாமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியம் அறிவித்திருப்பதை வரவேற்ப தாகவும் அதேசமயம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மதிமுக உறுப்பினர் சாந்தா மணி கோரிக்கை விடுத்தார். பல்வேறு வேலைகள் செய்வதற்கு ஆட்களே இல்லை எனவே ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று சாந்தாமணி கேட்டுக்கொண்டார். மாநகராட்சிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பது காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டி யது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட் டுள்ளது எனினும் ஆட்களை நிரப்பும் வழி முறை தெளிவாக இல்லை அரசிடம் கேட்டி ருப்பதாக மேயர் தெரிவித்தார். குடிநீர் கசிவு சீரமைப்பு பணிகளை செய்யும் அலுவலர்கள் உடனடியாக பில்களை செட்டில் செய்தால் தான் ஒப்பந்த தாரர்கள் அடுத்தடுத்து வேலை செய்வார்கள் என்று மேயர் அறிவுறுத்தினார். வார்டுகளில் தெரு விளக்குகள் சரி செய் வது இல்லை. தெரு விளக்குகளை சரி செய் தால் மீண்டும் உடனே அது பழுதடைந்து விடு கிறது. ஒப்பந்ததாரர்கள் தெருவிளக்கு பணி களை செய்வதில்லை. தெருவிளக்கு வேலை செய்யக்கூடியவர்கள் சம்பளம் தரவில்லை என்று ஊருக்கு போய் விட்டார்கள். எனவே தெருவிளக்கு ஒப்பந்தம் எடுத்திருப்பதை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் வழங்க வேண்டும் என்று பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி னர். தெருவிளக்கு பழுது நீக்கும் ஒப்பந்ததாரர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மழைக்கா லத்திற்கு முன்பாக அனைத்து தெரு விளக்கு களும் சரி செய்யப்பட வேண்டும் என்று மேயர் கூறினார். கவுன்சிலர் ராஜேந்திரன் கூறுகையில் வடக்கு பகுதி சர்வேயர் அலுவலகத்தில் இருப்பதில்லை நில அளவை பணிக்காக வரக்கூடியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கி றார்கள். அந்த அலுவலகம் எப்போதும் பூட் டியே கிடக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் வெளிநடப்பு
மாநகராட்சி திடக்கழிவு பணியை அவுட் சோர்சிங் கொடுத்தது தவறு. இந்தப் பணி யில் நிரந்தர தொழிலாளர்களை வைத்து வேலை செய்ய வேண்டும். ஒப்பந்ததா ரர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதி யத்தை வழங்க வேண்டும். ஏற்கனவே இருக் கும் நிரந்தர தொழிலாளர்களை வேறு பணி களுக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுத் தலை வர் எஸ்.ரவிச்சந்திரன் கூறினார். எனினும் இதுகுறித்து ஏற்கனவே பேசப் பட்டு விட்டது. நிரந்தர பணியாளர்களை அரசு வழிகாட்டுதல்படி தான் பயன்படுத்த முடியும் என்று மேயர் பதிலளித்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வ தாக அறிவித்துவிட்டு வெளியேறினர்.கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் காலனிகளிலும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கு அர சிடம் நிதியாதாரம் பெற்று செயல்படுத்தப் படும் என்றார். தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட் டுள்ள நகர் நல மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கவுன்சிலர் துளசிமணி கூறினார். மொத்தம் 34 நகர நல மையங்கள் கட்டப்பட்டது 25 மையங்கள் முதல் கட்ட மாக முதலமைச்சரால் திறக்கப்பட்டு விட்டன. மீதமிருக்கும் ஒன்பது நகர் நல மையங் களும் முதலமைச்சர் ஒப்புதல் பெற்று விரை வில் திறக்கப்படும் என்று மேயர் கூறினார். மதிமுக கவுன்சிலர் நாகராஜ் பேசும்பொ ழுது வடக்கு பகுதியில் ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என்று கோரிக்கை விடுத் தார். கடந்த இரண்டு மாமன்ற கூட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் மீண்டும் இந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. அந்த தீர்மா னத்தை நிறைவேற்ற கூடாது என்று அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். வேறு சில மாமன்ற உறுப்பினர்களும் அதை வலியுறுத்தினர்.
சிபிஎம் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன் சிலர் ஆர்.மணிமேகலை பேசும்போது வீர பாண்டி பிரிவு முதல் நொச்சிபாளையம் சாலை வரை தேங்கியிருக்கும் வண்டல் மண்ணை எடுக்க வேண்டும். மழைக்காலம் வந்தால் மிகவும் சிரமமாகிவிடும். சுண்டமேடு அம்பேத்கார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியிலேயே பொதுக் கழிப்பி டம் உள்ளது. தற்போது அதை தள்ளி மற் றொரு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள் ளது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் பொதுக்கழிப்பிடத்தை பராமரித்து மக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கோரிக்கையை கடிதமாக கொடுங்கள் என்று மேயர் கூறினார். கடிதமாக கொடுத்தால் வேலை நடப்பதில்லை என்று மணிமேகலை கூறினார். கடந்த இரண்டு மாதங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் கவுன்சிலர் கள் கோரினர்.