districts

img

உள்ளாட்சித்துறை ஊழியர்களின் பேரவைக் கூட்டம்

உதகை, ஜூலை 23- உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறை  ஊழியர்களின் ஆண்டு பேரவைக் கூட் டம் ஆனந்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உள்ளாட்சி மற் றும் நகராட்சி துறை ஊழியர்களின்  ஆண்டு பேரவை செவ்வாயன்று ஆனந் தகிரியில் நடைபெற்றது. இப்பேரவைக் கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சேகர் அறிக் கையை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவி வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். இதில், மாநிலப் பொருளாளர் ரங்கராஜ், சிஐ டியு மாவட்டப் பொருளாளர் நவீன்சந்தி ரன், எல்.ஐ.சி தலைவர் கோபால், அரசு  போக்குவரத்து கழகச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இதில், மாவட்டத் தலைவராக சி. சேகர், மாவட்டச் செயலாளராக ஆர். பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளராக  ஆர்.ரவி, துணைத் தலைவர்கள் ஜீவா,  மஞ்சுளா, ரமேஷ். துணைச் செயலா ளர்கள் சிலம்பு, ஜெனிபர், சந்தோஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திர ளான நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கலந்து கொண்ட னர். முடிவில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் வினோத் நிறைவுறையாற்றினார். எஸ்.ரவி நன்றி கூறினார்.