திருப்பூர் தமிழக அரசின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டத்திற்கு மாநகராட்சி பொது நிதி யிலிருந்து நிதி ஒதுக்குவது சரியல்ல. மாநில அரசு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். மாநகராட்சி மேயர் நா.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட் டத்தில் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் ர.மணிமேகலை கூறியதாவது, திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களில் உள்ள ஆழ்குழாய் மின் இணைப்பு மோட்டார் பழுது சரி செய்ய பராமரிப்பு பணி ஆகியவற்றிற்கு தனியார் இடம் ஒப்பந்த அடிப்படையில் விடு வதற்கு ஒரு ஆண்டுக்கு ரூபாய் 4 கோடி 51 லட்சத்தி 73 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கு மாறாக நேரடியாக நிரந்தர பணியாளர்களை நிய மித்து ஆழ்குழாய் மோட்டார் பராமரிப்பு பணி களை மேற்கொண்டால் இந்த செலவு தொகை குறையும். மக்களுக்கும் உடனடி யாக சேவை வழங்க முடியும்.
மாநகரப் பகுதி களில் தெருநாய் தொல்லை அதிக அளவில் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத் திட தங்கம் மெமோரியல் டிரஸ்ட் நிறுவனத் திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாய் தொல்லை என்ற பொதுமக்கள் அழைத்தால், அவர்களிடமே பணம் கேட்கும் நிலை உள்ளது. அத்துடன் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து உணவு அளித்து பராமரிப்பதற்கு ஒரு தெரு நாய்க்கு ரூ.1.650 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 5000 தெரு நாய்கள் பிடிப் பது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 82 லட்சத்தி 50 ஆயிரம் செலவா கும். இவ்வளவு தொகை பெரிய செலவு செய் தாலும் நாளுக்கு நாள் நாய் தொல்லை அதி கரித்து வருகிறது. மாநகராட்சிக்கும் மிகப் பெரும் செலவு ஏற்படுகிறது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த பொருத்தமான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். காலை உணவு திட்டத்தை வரவேற்கி றோம். அதே சமயம் ஐந்து சமையல் கூடங்க ளில் இருந்து உணவு வழங்கும் பணிக்கு 266 பேருக்கு மாதம் 1500 வீதம் ஓராண்டுக்கு மாநகராட்சி நிதியில் ரூ.47 லட்சத்து 88 ஆயிரம் செலவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஏற் கனவே மாநகராட்சியில் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்புப ணிகள் ஏராளமாக உள்ளன. அதற்கே போதிய நிதி இல்லை என்று சொத்து வரி உயர்த்தப்பட் டுள்ளது. பல்வேறு கட்டணங்களை அதிக ரிக்கவும் திட்டமிட்டு உள்ளீர்கள். இந்த நிலை யில் தமிழக அரசின் காலை உணவு திட்டத் திற்கு ரூ. 47 லட்சத்து 88 ஆயிரம் மாநக ராட்சி பொது நிதியிலிருந்து ஒதுக்குவது சரி யல்ல. அரசின் சிறப்பு திட்டம் என்ற முறையில் நேரடியாக மாநில அரசு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கடந்த காலங்க ளில் அம்மா உணவு திட்டத்திற்கும் மாநக ராட்சி நிதி செலவிடப்பட்டது. அப்போது ஆட் சேபனை தெரிவித்தோம். மாநகராட்சி பணிக்கு உரிய நிதியை வேறு பணிக்கு மடை மாற்றம் செய்யக்கூடாது. பருவ மழை பெய்த நிலையில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஏரா ளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்சிறப்பு மருத் துவ முகாம்கள் நடத்துவதாக தெரிவித்துள் ளார். எந்த நிலையில் கொசுப்புழுக்களை ஒழிப்பதற்கு என்று பல்வேறு மருந்து வகை கள் வாங்குவதற்கும் சற்றுகுறைய ரூ.66 லட் சத்து 42 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. டெங்கு கொசுவை பொறுத்தவரை ஒரு பகுதியில் உருவாகிவிட்டால் அவை 20 ஆண்டுகள் அப்பகுதியில் நீடித்திருக்கும் என்று மருத்துவர்கள் சுகாதாரத் துறையி னர் கூறுகின்றனர். திருப்பூர்மாநகராட்சியை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாக டெங்கு கொசு பாதிப்பு தொடர்ந்து வருகிறது. எனவே நீண்ட கால தொலைநோக்கு அடிப் படையில் பிரச்சனைக்கு தீர்வு காண பொது சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்த கைய நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை ஒவ்வொரு ஆண்டும்கொசு புழு ஒழிப்பு என்று சொல்லி பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால்டெங்கு காய்ச்சல் ஆண்டுக்காண்டு தொடர்ந்து வருகிறது. அப்ப டியானால் ஒதுக்கப்படும் நீதி எதற்காக பயன்படுகிறது என்று தெரியவில்லை. மாநக ராட்சி நிர்வாகம் மாநில அரசின் சுகாதார துறை யுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு நீண்ட கால அடிப்படையில் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஆக்கப்பூர்வமான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.