கோவை, ஏப்.10- கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட மொத்தம் 183 மருத் துவமனைகளில் திங்களன்று கொரோனா தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று பாதிப்பு அதிக ரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இரண்டு நாட்கள், கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற் கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அறிவு றுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வந் தால் அணுக தேவையான மாதிரி புறநோயா ளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சி ஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணிப்பில் வைக் கும் சாதாரண வார்டு உள்ளிட்டவை தற்கா லிகமாக அமைக்கப்பட்டது. அதன்படி, திடீ ரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனு மதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்து வழிகாட்டு தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர் கள், செவிலியர்கள் திரளானோர் பங்கேற்ற னர். இதுகுறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கொரோனா தொற் றாளர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என் பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட் டது. கோவையில் தனியார் மருத்துவமனை யில் 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத் தில் 113 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். கோவையில் பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. தொற் றால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக் கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா அறி குறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகி றோம். மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கள் தேவைக்கு ஏற்ப உள்ளது, என்றார்.