districts

அவிநாசியில் இரு குழந்தைகள் உட்பட 9 பேருக்கு கொரோனா

அவிநாசி, ஆக. 1- அவிநாசி பகுதியில் இரு குழந்தைகள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று வெள்ளியன்று உறுதி செய்யப்பட் டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள திருமுரு கன்பூண்டி பேரூராட்சியில் பணியாற்றி வந்த டேங் ஆப்ரேட் டருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோ தனை செய்யப்பட்டதில் அவரது மனைவி (50), பேத்தி (4) ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதே போல் தெக்கலூர் சமத்துவபுரத்தில் 3 வயதுக் குழந்தை, செஞ்சிபாளையம்புதூர் பகுதியில் 29, 24 வயது ஆண்களுக் கும், புதிய திருப்பூர் பகுதியில் வடமாநிலப் பெண்கள் இருவ ருக்கும், அவிநாசி வங்கி பணியாளருக்கும், திருமுருகன் பூண்டியில் காவலராகப் பணியாற்றும் 40 வயதுடைய காவ லர் உட்பட அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் 9 பேருக்கு வெள்ளியன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்க ளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

;