districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரேசன் அட்டை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கூட்டுறவு கடன் சங்க ஊழியர் கைது

ரேசன் அட்டை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கூட்டுறவு கடன் சங்க ஊழியர் கைது சேலம், ஏப்.5- ஓமலூர் அருகே புதிய ரேசன் அட்டை வாங்கித்தரு வதாக லஞ்சம் வாங்கிய கூட்டுறவு கடன் சங்க ஊழி யரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் சார் பில் ஐந்து நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வரு கின்றன. இந்நிலையில், பூசாரிப்பட்டி கிராமம், வைரங் காடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி  செல்வராணி, கடந்த டிசம்பர் மாதம் புதிய ரேசன் அட்டை  கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். தேர்தல் காரண மாக புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட் டுள்ள நிலையில், பூசாரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றி வரும் ராஜேந் திரன் என்பவர், செல்வராணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் புதிய ரேசன்  அட்டை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். அதற்கு அவர்,  தனது கணவா் பெங்களூரில் வேலை செய்து வருவ தாகவும், அவர் பணம் அனுப்பியதும் கொடுப்பதாகக் கூறி யுள்ளார். ஆனால், ராஜேந்திரன் கடந்த 10 நாட்களாக தின மும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுத்து ரேசன் அட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என வற்புறுத்தியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான  செல்வராணி, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச  ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலை மையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், பூசாரிப்பட்டி நியாயவி லைக்கடை அருகே மறைந்திருந்தனர். அப்போது செல்வரா ணியிடம் ரூ.4 ஆயிரத்தை ராஜேந்திரன் பெறும்போது, கையும்  களவுமாக அவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

மரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் பலி

நாமக்கல், ஏப்.5- குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதி  விபத்துக்குள்ளானதில், 4 இளைஞர்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள  சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திரு விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இத்திருவி ழாவில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் இளை ஞர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார், குமாரபாளையம் அருகே உள்ள  குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோ ரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகு றித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமார பாளையம் காவல் துறையினர், சடலங்களை மீட்டு குமார பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மதுபோதையிலிருந்த தலைமையாசிரியர் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு

தருமபுரி, ஏப்.5- மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர், வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது விசா ரணையில் உண்மை என தெரியவர அவரை பணியி லிருந்து விடுவித்து தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் உத்த ரவிட்டார். தருமபுரி ஒன்றியம், மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும்  எம்.குணசேகரன். இவர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோ தையில் இருந்தது மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பள்ளி பார்வையின் போது கண்டறியப்பட்டது. இவரை  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்து வச்சான்று பெறப்பட்டது. இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அலுவலரின் அறிக்கை மற்றும் மருத்துவரின் சான்றுப்படியும், இவர் மது அருந்தி இருந்தது நிரூபணமானது. இதைத்தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இத னால் மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட  கல்வி அலுவலர் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

வெள்ளிக்கொலுசு தொழிலாளர்களிடம் வாக்குசேகரிப்பு

சேலம், ஏப்.5- சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தி தொழிலாளர்களிடம், திமுக வேட்பாளர் டி. எம்.செல்வகணபதி வாக்குசேகரிப்பில் ஈடு பட்டார். சேலம் மக்களவை தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சிவதாபு ரம், பணங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, வெள்ளிக்கொலுசு உற்பத்தி செய்யும் தொழி லாளர்களிடம் கலந்துரையாடிய டி.எம்.செல் வகணபதி, வெள்ளிக்கொலுசு தொழிலை மேம்படுத்த சில்வர் பார்க் பூங்கா அமைக்க  நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார். மேலும், அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24 கோடியில் கட்டப்படும் வரும் பன்னடுக்கு வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என வும் தெரிவித்தார். இதுதவிர்த்து, தொழில் சார்ந்த பிரச்னைகளைக் கேட்டறிந்த டி.எம். செல்வகணபதி, வெள்ளிக்கொலுசு தொழில் புத்துயிர் பெற தேவையான அனைத்து நடவ டிக்கைகளையும் முன்னெடுப்பேன் என உறு தியளித்தார். வேட்பாளருடன் சேலம் மத்திய  மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம் எல்ஏ, கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி  நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

காவல் துறையின் கொடி அணிவகுப்பு

நாமக்கல், ஏப்.5- குமாரபாளையத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவ லர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கள் குமாரபாளையம் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் நடந்தது. போலீ சாரும் தேர்தல் பணிகளை செய்து வருகி றார்கள். குமாரபாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட 279 வாக்குப்பதிவு மையங்க ளில் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலை யில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக் கப்பதை உறுதி செய்யும் வகையில், காவல்  துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடை பெற்றது. கூடுதல் துணை காவல் கண்கா ணிப்பாளர் செல்வராஜ், துணை காவல் கண் காணிப்பாளர் இமயவரம்பன் தலைமை யில், காவேரி நகர், காவேரி பாலம் பிரிவு பகு தியில் தொடங்கி, எடப்பாடி சாலை, சேலம்  சாலை வழியாக ராஜம் தியேட்டர் முன்பு  நிறைவுபெற்றது. வழி நெடுக பொதுமக்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டனர்.

கிளை வாய்க்காலிலும் தண்ணீர் திறக்க கோரிக்கை

நாமக்கல், ஏப்.5- மேட்டூர் அணையிலுள்ள கிழக்குக் கரை கிளை வாய்க்காலிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் ஆண்டுதோறும் விவசாயத்திற்காக ஜூலை மாதம் இறுதியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, மேட் டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்ப தால், வாய்க்காலில் தண்ணீர் திறந்து  விடப்படவில்லை. அதனால் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத் தில் நெல் சாகுபடி உள்ளிட்ட பல பயிர் களை பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடும் கோடை  வெப்பம் சுட்டெரித்து வரும் நிலை யில், கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் கொடுக்க முடியாத நிலை நீடித்து வந்தது. அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டத்தைத்தொடர்ந்து, தற் போது வாய்க்காலில் தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஏப்.10 வரை வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த குறுகிய நாட்களாவது தண் ணீர் வந்தால் தட்டான்குட்டை, குப்பாண் டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதி யில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப் பாக உள்ளது. ஆனால், கிளை வாய்க் கால் மதகுகள் திறக்கப்படாமல் உள் ளது. இதனையும் திறந்து விட்டால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன், நிலத் தடி நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் பஞ்சம்  இல்லாத நிலை ஏற்படும். கிளை  வாய்க்கால் பகுதிகளில் ஆயிரக்கணக் கான கால்நடைகள் உள்ளன. அவற்றிற் கும் குடிநீர் கிடைக்கும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, குறைந்த  அளவிலான தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கிளை வாய்க்கால் மதகுகள் திறக்க வாய்ப்பு  குறைவு. இருப்பினும் மேலதிகாரிகள் ஆலோசனை பெற்று உரிய நடவ டிக்கை எடுக்கப்படும், என்று கூறினார் கள். விரைவில் மதகுகள் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

கோவை, ஏப். 5- சிறப்பு ரயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது, கோயம்புத் தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர் ணாகுளம் - பிரம்மாபூர் இடையே முன்பதிவு செய்யப்படாத வாராந்திர சிறப்பு ரயில்கள் ரயில் எண்.06087 எர்ணாகுளம் ஜேஎன் -  பிரம்மாபூர் முன்பதிவு செய்யப்படாத வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து 06.04.2024 முதல் 25.05.2024 வரை சனிக்கிழமைகளில் 23.00 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை 05.00 மணிக்கு பிரம்மபூரை சென்றடையும். ரயில் எண்.06088  பிரம்மாபூர் - எர்ணாகுளம் ஜே.என் முன்பதிவு  செய்யப்படாத வாராந்திர சிறப்பு ரயில் 08.04.2024 முதல் 27.05.2024 வரை திங்கட்கிழ மைகளில் பிரம்மபூரில் இருந்து மதியம்  12.40 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்கி ழமை 21.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்ற டையும்.  ரயில் எண்.06087 எர்ணாகுளம் ஜே.என்  - பிரம்மபூர் முன்பதிவு செய்யப்படாத  வாராந்திர சிறப்பு ரயில்(ஞாயிற்றுக்கிழமை யும், பிரம்மாபூர் - எர்ணாகுளம் இடையே முன் பதிவு செய்யப்படாத வாராந்திர சிறப்பு ரயில்  செவ்வாயன்றும் செல்லும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா கூட்டணிக்கு எங்கள் ஆதரவு  இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு

கோவை, ஏப்.5- ஜனநாயகத்தையும், சமூக நீதி யையும், மதசார்பின்மையையும் சித்தாந்த ரீதியாக வலுவாக முன்னெடுக்கும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கே எங்கள்  ஆதரவு என கோவை இஸ்லாமிய  கூட்டமைப்பு அறிக்கை வெளியிட் டுள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, இந்தியா விடுதலைக்கு பிறகான 75 ஆண்டுகால வர லாற்றில் இதுவரை இல்லாத இருண்ட சூழலை நாடு சந்தித்து  கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த, இந்த  பத்தாண்டுகளில் இந்திய ஜனநாய கத்தின் அத்துணை விழுமியங்க ளும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகிறது. மாநில உரிமைகள் அழிக்கப்படுகிறது. நமது மாநில வளர்ச்சிகள் உறிஞ்சப்பட்டு, பெருந்துயர் நிவாரணம் கூட மறுக் கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறு பான்மை மக்கள் சொல் லொண்ணா துயரங்களை சந்தித்து  வருகின்றனர்.  இதுவரை நடந்த தேர்தலை போன்றதல்ல இந்த தேர்தல். இந்திய நாடு ஜனநாயக நாடாக நீடிக்குமா? அல்லது சர்வாதிகார நாடாகுமா? என்கிற மிகப்பெரிய கேள்விக்கான விடை கண்டாக வேண்டிய மிக முக்கியமான தேர் தல். எனவே அனைத்து மக்களும்  முழுமையாக இந்தியா கூட்ட ணிக்கு வாக்களிப்பதை ஆர்வ மூட்டுங்கள். மேலும், தொழில் நகரான நமது கோவையில் பாசிசத்தின் இந்திய முகமான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற அண்ணாமைலையின் பெயரில் முயற்சிக்கிறது. ஒற்றுமையாக வாழும் கோவை மக்களிடம் மொழி ரீதியாகவும், மத ரீதியாக வும், தென்மாநிலத்தவர், வட மாநி லத்தவர் என்கிற பிரிவினையை ஏற்படுத்தி வெற்றிபெற முயற்சிக் கிறது. அமைதி ஒற்றுமையை கருத்தில் கொண்டு அனைத்து மக்க ளும் ஒன்றிணைந்து பாசிச பாஜக வின் வேட்பாளர் அண்ணாம லையை புறக்கணிக்க வேண்டும்.  அதேபோன்று, பாஜக கொண்டு வந்த சிஏஏ, என்ஆர்சி, நீட் சட்டங்களுக்கு ஆதரவு தெரி வித்து சட்டமியற்ற உதவிய அதிமு கவையும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் இந்த நாடா ளுமன்ற தேர்தலில் முற்றாக புறக்கணிக்கவும், அவர்களுக்கு செலுத்தும் வாக்கு மறைமுகமாக பாஜகவுக்கு செலுத்தும் வாக்கா கும்.  ஜனநாயகத்தையும், சமூக  நீதியையும், மதசார்பின்மையை யும் சித்தாந்த ரீதியாக வலுவாக முன்னெடுக்கும் இந்தியா கூட்டணி  கட்சி வேட்பாளர்களை இஸ்லா மிய கூட்டமைப்பு முழுமையாக ஆதரிக்கிறது. அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி  திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமாரையும், பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியையும் வெற்றி பெற உழைக்க வேண்டுமாய், தேச  நலனை கருத்தில் கொண்டு கூட்ட மைப்பு கேட்டுக்கொள்கிறது. கூட்டமைப்பின் மேற்கண்ட கோரிக்கைகளை, கருத்துகளை ஜமாத்துல் உலமா சபை, சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜம்மியத்து அஹலில் குர்ஆன் வல் ஹதீஸ், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் , ஏகத்துவ முஸ் லீம் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, வெல்ஃபேர் கட்சி, வஹ்தத்தே இஸ்லாமி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

30 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளுகுளு கோவையில் அதிகபட்ச வெப்பம்

30 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளுகுளு கோவையில் அதிகபட்ச வெப்பம் கோவை, ஏப்.5- குளுகுளு கோவையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்சமாக வெள்ளியன்று 103.64 டிகிரி வெப் பம் பதிவாகியுள்ளது. கோவை என்றால், சுவையான சிறுவாணியும், குளுகுளு  கால நிலையும் என்பதே உலகம் அறிந்துள்ளது. அந்த கால நிலைக்கு பெயர்பெற்ற கோவையில் நடப்பு ஆண்டில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. காலை 8 மணிக்கே மக்கள் வெளியே வர அச்சப்படும் நிலை உள்ளது. நேரம் செல்லச்செல்ல வெப்பம் உச்சத்தை  தொடுகிறது. பகல்நேரத்தில்  வெப்பத்தின் தாக்கம் இரவிலும்  எதிரொலித்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர்.  இந்நிலையில், கோவையில் கடந்த 30 ஆண்டுகளில் இல் லாத வகையில் அதிகபட்ச வெப்பநிலையாக 103.64 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வெள்ளியன்று பதிவாகியுள்ளது. கோவை பன்னாட்டு விமான நிலையப் பகுதியில் உள்ள வானிலை மையத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோவையில் கடந்த 1993 ஆம் ஆண்டு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 30  ஆண்டுகளுக்குப் பிறகு 103.64 டிகிரி வெப்பநிலை வெள்ளி யன்று பதிவாகியுள்ளதாக வானிலை அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். இந்த வெப்ப நிலை கோவையில் இன்னும் நான்கு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும், ஏப்.12 ஆம் தேதி ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள் ளதாகவும் கோவை வெதர்மேன் சந்தோஷ்குமார் தெரி வித்துள்ளார்.

பங்காளி சண்டையால் போக்குவரத்து பாதிப்பு

சூலூர் அருகே தேர்தல் பரப்புரை யின் போது  பாஜகவின் பிரச்சார  வாகனம் ஒன்று அதிமுகவின் பிரச்சார வேனை உரசி சென்ற நிலையில் அதி முக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் அண்ணா மலையின் பிரச்சார வாகனத்தை முற்றுகை யிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தனித் தனியே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நி லையில், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதி யில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலை வர் அண்ணாமலை வந்தார். அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து அப் பகுதியில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரச் சார வாகனத்தில் இருந்து இறங்கிய  அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச் சந்திரன் மற்றும் கந்தசாமி எம்.எல்.ஏ உள் ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அண்ணா மலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கி ருந்து கலைந்து போக செய்தனர். அதிமுக மற்றும் பாஜகவின் பங்காளி சண்டையால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.5- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மேற்கு மண்டல சிறப்புப் பேரவைக் கூட்டம் செவ்வாயன்று, திருப்பூர் தனியார் மண்டபத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டச் செயலா ளர் சி.ஜெயப்பிரகாசம் வரவேற்றார். எதிர் கால திட்டங்கள் குறித்து மாநில பொதுச்செய லாளர் பி.பர்வதராஜன், இயக்க நடைமுறை கள் குறித்து மாநிலப் பொருளாளர் ப. கிருஷ்ணன், ஓய்வூதியர் சந்திக்கும் சவால் கள் என்பது குறித்து துணைப் பொதுச் செய லாளர் டி.மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் உரை யாற்றினர். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களுக்குச் செலவினத்தை அரசே ஏற்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் வாழ்த் திப் பேசினர். மாநிலப் பொதுக்குழு உறுப்பி னர் ஏ.மாணிக்கம் நன்றி கூறினார்.