குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 2 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
உதகை, டிச.9- கடந்த 2021 ஆம் ஆண்டு டிச.8 ஆம் தேதியன்று, குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் முப்படை தளபதி பிபின் ராபத், அவரது மனைவி உட்பட 14 பேர் வந்த ஹெலி காப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாட்டு மக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விபத்தில் 14 பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. ராணுவ பயிற்சி கல்லூரி துணை கமாண்டன்ட் ரியர் அட்மிரல் புருவீர் தாஸ், பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். இதன்பின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் பிபின் ராவத்திற்கு நினைவுத் தூண் வைக்கப்பட்டு, ராணுவத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விபத்து ஏற்பட்ட போது உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பயிர்களுக்கு நடுவே கஞ்சா பயிர்
கோபி, டிச. 9- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கடம் பூர் மலைப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், குத்தகை அடிப் படையில் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம் பயிரிட் டுள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசம் சோளப்பயிரிடப்பட் டுள்ளதின் நடுவே கஞ்சா செடியின் வாசனை வருவதாக அவ ரது நிலத்திற்கு அருகே இருந்த விவசாயிகள் சிலர் கோபி மது விலக்கு அமலக்கப்பிரிவு காவல்நிலையத்திற்கு தெரிவித் துள்ளனர். இதனையடுத்து, கோபி மதுவிலக்கு காவல்துறை யினர் குன்றி பகுதியில் ஞானப்பிரகாசத்தின் விவசாய நிலத்தை சோதனை மேற்கொண்டபோது, அங்கு பயிரிடப் பட்டுள்ள சோளப்பயிர்களுக்கு நடுவே கஞ்சா செடி இருப் பதை கண்டுபிடித்தனர். பின்னர், விசாரணை மேற்கொண்ட போது அவர் கஞ்சா பயிரை வளர்த்ததை ஒப்புக்கொண்டுள் ளதாக தெரிகிறது. இதனையடுத்து கோபிமதுவிலக்கு ஆய் வாளர் கலையரசி உத்தரவின் பேரில் ஞானப்பிரகாசத்தை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையிலடைத்தனர்.
வாகன விபத்தில் ஒருவர் பலி
சேலம், டிச.9- சேலம் அருகே திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் ஸ்ரீவித்யன் (20). இவர் சேலத் தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி மைதானம் அருகே சென்ற போது அவரது வாகன மும், ஒருவழிப்பாதையில் எதிரே வந்த சீலநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பச்சமுத்து (28) என்பவரது இருசக்கர வாகன மும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்தகாயம் அடைந்த ஸ்ரீவித்யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பச்சமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் பலியான ஸ்ரீவித்யன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
இருளில் மூழ்கும் நல்லம்பள்ளி
தருமபுரி, டிச.9- நல்லம்பள்ளி வட்டத்தில், இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல் இருட்டில் உள்ளதால், மின்விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில், சேலம் - பெங்களூரு சாலையில் இருக்க கூடிய முக்கிய வருவாய் வட்டம் நல்லம்பள்ளி, இங்கு வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கம் வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. இங்கு வாரந் தோறும் நடைபெறும் செவ்வாய் சந்தை பிரபலமானது, ஆடு, மாடு, கோழி, காய்கறிகள், மளிகை பொருட்கள், விவசாய உபகரணங்கள் என இங்கு கிடைப்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் நம்பியிருப்பது நல்லம்பள்ளி வாரச்சந்தை யாகும், ஆடு, மாடு, கோழிகள் வாங்கவும் விற்கவும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நல்லம்பள்ளி்க்கு வந்து செல் கின்றனர். நல்லம்பள்ளி சேலம்-பெங்களூர் பைபாஸ் சாலை யிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரிவதில்லை. மேலும், அரசு அலுவலகங்கள் வாரச்சந்தை மக்கள் கூடும் இடங்களில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால், பெண்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே நல்லம் பள்ளியில் முக்கிய இடங்களிலும் பைபாஸ் சாலையிலும் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்
சிறுத்தையால் மரத்தில் மோதிய வாகனம்
உதகை, டிச.9- குன்னூர் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே வந்த சிறுத்தையால், மரத்தில் சுற் றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், குன்னூர், பேரக்ஸ் பகு தியைச் சேர்ந்தவர் கிறிஸ்டி என்ற ஆரோக்ய நாதன். இவர் சுற்றுலா வாகனமான இன் னோவா கார் ஓட்டி வருகிறார். வழக்கம்போல் கோவைக்கு சென்று சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் வெள்ளியன்று உத கைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை யில், மரப்பாலம் அருகே வந்த போது சிறுத்தை ஒன்று குறுக்கே பாய்ந்தது. அப் போது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையிலி ருந்த மரத்தில் மோதி நின்றது. இதனால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார். உட னடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு இருபுற மும் வாகனங்களை நிறுத்தி, விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இதனால் அப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தின விழா
தருமபுரி, டிச.9- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திற னாளிகள் தினவிழா தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 24 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.12.60 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டது.
ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
நாமக்கல், டிச.9- நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பெருமாகவுண்டம்பாளையம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து வந்த னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் ச.உமா, பிரச்ச னைக்குரிய பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட் டிய வீடுகளை, தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந் தால், சட்டப்படி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங் கள் போராட்டத்தை கைவிட்டனர்.
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது!
ஈரோடு, டிச.9- அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள் ளம் அணை, தற்போது பெய்து வரும் கன மழையால் நிரம்பியது. ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி யில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை சுற்று பகுதி யில் பொழிய கூடிய மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு, கோடை காலங்களில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராகவும், விவ சாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிகளில் பொழிந்த மழையினால் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி சனியன்று காலை 6 மணியளவில் நிறைந்து 25 கன அடி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும், இன்னும் தொடர்ந்து 5 நாட்கள் மழைப்பொழிவு இருக் கும் என்பதால், வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியை ஒட்டியுள்ள கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப் பணி மற்றும் வருவாய்த்துறையினர் எச்ச ரித்து வருகின்றனர். மேலும், அந்தியூர் பேரூ ராட்சி பகுதியில் பேரூராட்சி செயல் அலுவ லர் (பொ) நாகேஷ், தூய்மை ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் ஓடையின் தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் வெளுத்து வாங்கிய மழையால் அணை கிடு கிடுவென 2.25 அடி நீர் உயர்ந்தது. அது போன்று இரவு நேரங்களில் அதிகளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதி களுக்குள் புகுந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க, அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் சங்கராபாளை யம், கெட்டி சமுத்திரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறைதீர் முகாம்
ஈரோடு, டிச.9- ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு வரும் 15 ஆம் தேதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். இம்முகாமில், விவசாய நிலங்களை அள வைத்துறை மூலம் அளவீடு செய்தல் போன்ற கோரிக் கைகள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
கானூர்புதூரில் நாளை மின் தடை
அவிநாசி, டிச.9- கானூர்புதூர், பசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திங்கட் கிழமை (டிச.11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவிநாசி மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கானூர், அல்லப்பா ளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத் தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபா ளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத் தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி. பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பா ளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபா ளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
நலத்திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பூர், டிச.9- ஆதிதிராவிடர் நலத்துறை, தொழி லாளர் நலத்துறை, தாட்கோ, பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத் தில், திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் திட்டங்களை பொதுமக் களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி வழங்க துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அறிவுரை வழங்கினார் கள். இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் த. ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சும ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராம் குமார் (திருப்பூர்), செந்தில் அரசன் (தாராபுரம்), ஜஸ்வந்த கண்ணன் (உடு மலைப்பேட்டை), பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமலிங் கம், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சி தா தேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பா தேவி, மாவட்ட மேலா ளர் (தாட்கோ) ரஞ்சித்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனி ருந்தனர்.
பழங்குடியின பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கிடுக
உதகை, டிச.9- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி யின பெண்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து தோடர் நலவாழ்வு சங்கச் செய லாளர் ஸ்ரீகாந்த் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் பண்டைய பூர்வீக பழங்குடி மக்களான தோடர், கோத்தர், இரு ளர், பனியர், குரும்பர் மற்றும் காட்டு நாய்க்கர் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வா தாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 மகளி ருக்கு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத் தில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மாதந்தோ றும் ரூ.1000 கிடைக்கவில்லை. எனவே, நீல கிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக ளிரின் நலன் கருதி, சிறப்பு சலுகையாக அனைத்து பழங்குடியின மகளிருக்கும் இத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது.
கடை ஒதுக்குவது குறித்து வதந்தி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ஈரோடு, டிச.9- கனிமார்க்கெட் வணிக வளாக கடைகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூல மாக அப்துல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி திறக் கப்பட்டும், கடந்த ஓராண்டாக இதில் கடைகள் ஒதுக்கப்பட வில்லை. அதேசமயம் கனிமார்கெட் வளாகத்தில் வியாபா ரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படை யில் வழங்க வேண்டும் என தொடர்ந்து முறையிட்டு வந்த னர். ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு மாநக ராட்சி நிர்வாகம் பொது ஏலம் விட முடிவு செய்தது. வைப்புத் தொகையும், வாடகையும் அதிகமாக இருந்ததால் கனி மார்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடை யில் நீதிமன்றம் சென்ற கனி மார்க்கெட் வியாபாரிகள் இம் மாதம் இறுதிவரை கடைகள் நடத்த அனுமதியளிக்க வேண் டும் என தீர்ப்பு பெற்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியா பாரிகளுக்கு முன்னுரிமை ஏலம் அளிக்கப்படும் என மாமன் றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து பரி சீலனைக் குழு அமைக்கப்பட்டு ஏற்கனவே கடை வைத்தி ருந்த வியாபாரிகளின் உண்மைத் தன்மை குறித்த பரிசீலனை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை கனிமார்கெட் வளாகத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளிடம் ஆவணங்களைப் பெற்று வருகிறது. இப்பரிசீலனையில் கலந்து கொண்டு விண் ணப்பம் அளித்தால் மட்டுமே உண்மைத்தன்மை அடிப்ப டையில் முன்னுரிமை ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக் கப்படுவர். அதன் பின்னர் மாமன்றத்தால் இறுதி செய்யப் பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பரிசீலனைக்கு விண்ணப் பம் அளிக்காத வியாபாரிகள் பொது ஏலத்தில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் முன்னுரிமை அடிப்படையில் 50 வியா பாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது என செய்தி கள் வந்தது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மாமன்ற கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்ட தொகையின் அடிப்படையில் மட்டுமே முன்னு ரிமை ஏலம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு இதர கடை கள் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி மூலமே ஒதுக்கீடு செய்யப்படும். நாளது தேதி வரை கனிமார்கெட் கடைகள் எவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே உண் மைக்கு புறம்பான செய்தியினையும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. அத்துடன் தவறான தகவல்களை பரப்பு வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.