சேலம், ஏப்.24- சேலம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் இருந்த நிழல் தரும் மரங்களை, ஒப்பந்ததாரர் அனுமதி யின்றி வெட்டியது, சர்சையை ஏற்ப டுத்தியுள்ளது. சேலம் அரசுகலைக் கல்லூரி அருகே, மாவட்ட நூலக மையம் செயல் பட்டு வருகிறது. இங்கு பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. மேலும் வாசகர்கள் இங்கே அமர்ந்து படிக்கவும் தேவை யான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளவும், இந்த நூலகத்தை நூற்றுக்கும் மேற்பட் டோர் தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். நூலக கட்டடத்தின் வெளிப்புறப் பகுதி சிதிலமடைந்து இருந்த காரணத் தினால் அதனை பராமரித்திட தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பராமரிப்பு பணி கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனி டையே மாணவ மாணவியர் மர நிழ லில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு படித்தும் வருகின்றனர். இந்நிலையில் நிழல் தரும் வகையில் இருந்த பல ஆண்டுகள் பழமையான மரங்களை ஒப்பந்ததாரர் நூலகர் அனுமதியின்றி யும், வருவாய்த்துறை அனுமதியின்றி யும் வெட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து நூலக வளாகத்திற்கு வந்த சமூக ஆர்வலர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், செய் தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்களை பராமரித்து அவற்றை மர பதிவேடு மூலம் தணிக்கை செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு செய்யாமல் மரங்களை வெட்டி உள்ளனர். மரங் களை வெட்டியது குறித்து நூலகர் மற் றும் வருவாய்த்துறை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. சேலம் மைய நூலகம் தற்போது பரா மரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகி றது. காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் இந்த பணி செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால் ஒப்பந்ததாரர் எந்த அரசு அலுவலரிடமும் தகவல் தெரிவிக் காமல் மரத்தை வெட்டியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 166 பிரிவின் கீழ் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வரு வாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் முறையிட்டு உள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.