திருப்பூர், நவ. 3 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி களில் ஒப்பந்த முறை மற்றும் தனியார்ம யத்தால் தினக்கூலி பணியாளர்களுக்கு நிர் ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் கூட தராமல் ஒப் பந்ததாரர்கள் கடுமையான சுரண்டலில் ஈடு பட்டுள்ளனர். டாலர் நகரம் என்று பெருமையு டன் கூறப்படும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், வேறு பல நகராட்சிகளில் தருவதை விட மிக வும் குறைவான ஊதியம் தரப்படுவது பெரும் கொடுமையாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற் றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய அடிப்படை யான பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1500 க்கும் மேற்பட்டோர் தினக்கூலி பணியாளர்க ளாக வேலை செய்து வருகின்றனர். இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன் றுக்கு ரூ. 330தான் ஊதியம் தரப்படுகிறது. இதி லும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ரூ.300 மட்டும்தான் தரப்படுகிறது. அதாவது மாதம் ரூ.8 ஆயிரத்து 580-தில் இருந்து 7500 ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் அவலநிலையில் இந்த பணியாளர் கள் வாழ்க்கை உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் திடக்க ழிவு மேலாண்மை பணிக்கு தனியார் நிறுவ னத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போதே, அந்த நிறுவனம் ஒவ்வொரு தினக் கூலி பணியாளருக்கும் எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விபரத்தையும் பட்டி யலிட்டுக் கொடுத்துள்ளது. அந்த பட்டியலில் உள்ள தொகையையும், இந்த பணியாளர்க ளுக்கு உண்மையில் கொடுக்கப்படும் தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஒப்பந்தம் என்ன?
ஒப்பந்தப்படி ஒரு பணியாளருக்கு ரூ.662. 97 வீதம் மாநகராட்சி வழங்குகிறது. இதில் இஎ ஸ்ஐக்கு ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ.16. 21ம், பணியாளர் பங்களிப்பு ரூ.3.74ம் பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு ஒப்பந் ததாரர் பங்களிப்பு ரூ.64.87ம், பணியாளர் பங்களிப்பு ரூ.59.88ம் பிடித்தம் செய்ய வேண் டும். பணியாளர் சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ.12.88 இதிலிருந்து ஒதுக்கப்படுகிறது. இந்த தொகைகளுக்கு சேவைக்கட்டணம் 10 சதவிகிதம், ஜிஎஸ்டி 18 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டது போக, நாளொன்றுக்கு ரூ.435.43 வீதம் ஒவ்வொரு பணியாளருக்கும் தின ஊதியம் வழங்க வேண்டும். இதன்படி மாதம் 26 நாட்களுக்கு கணக்கிட் டால் பணியாளர் ஒருவருக்கு ரூ.11 ஆயிரத்து 321. 18 பைசா தர வேண்டும். அதாவது இஎஸ்ஐ., பி.எப்., பிடித்தம் போக இந்த தொகை பணியாளர் கைகளுக்குப் போய்ச் சேர வேண்டும்.
அநீதியான அபகரிப்பு
இது தவிர ஒப்பந்ததாரர்கள் இஎஸ்ஐ., பி.எப்., பிடித்தம் செய்ததற்குரிய முறையான ஆவணங்களையும் பணியாளர்களுக்கு தரு வதில்லை. இதிலும் அவர்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை, பணி யாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்ப டுகிறது. இதன் மூலமும் பணியாளர்களின் ஊதியம் பறிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ் வொரு பணியாளரிடம் இருந்தும் குறைந் தபட்சம் ரூ.2700இல் இருந்து ரூ.3800 வரை மாதந்தோறும் ஒப்பந்ததாரர்கள் அபகரித்துக் கொள்கின்றனர். இது மிகக் கடும் சுரண்ட லும், மிகப்பெரும் அநீதியும் ஆகும்.
பிற நகரங்களில் என்ன நிலை?
இதேபோல் ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி நடைபெறும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதி யத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலும் திருப்பூ ரின் நிலை மோசமாகவே இருக்கிறது. குறிப் பாக அருகாமையில் உள்ள ஈரோடு மாநக ராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்கள் 1100 பேர் உள்ளனர். அவர்களுக்கு, தினக்கூலி ரூ.707 வீதம் வழங்கப்படுகிறது. இதில் 12 சதவிகிதம் பி.எப்., பங்களிப்புத் தொகை போக மீதி ரூ.622 வீதம் தரப்படுகிறது. அதேபோல் திருச்சி மாநகராட்சியில் 1344 பேருக்கு தினக்கூலி ரூ.575 வீதம் தரப்படுகி றது. இதில் 12 சதவிகிதம் பி.எப்., பிடித் தம் போக மீதி ரூ.506 தரப்படுகிறது. மேலும் அங்கு மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு அமலாகிறது. இதே திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் நகராட்சியில் ரூ.340 தரப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியை ஒட்டி இருக்கக்கூடிய திரு முருகன்பூண்டி நகராட்சியில் தினக் கூலி பணியாளர்களுக்கு ரூ.510 தரப்படுகி றது. பூண்டி பேரூராட்சியாக இருந்து அண் மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட் டது. இங்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் இல்லா மல் நகராட்சி நிர்வாகமே தற்காலிக அடிப்ப டையில் தினக்கூலி பணியாளர்களை நேரடி யாக நியமித்துள்ளது. இதனால் ஒப்பந்ததா ரர்கள் நிர்ணயித்த ஊதியத்தை குறைத்துக் கொடுக்கும் நிலை இல்லை. அத்துடன் பூண்டி, உடுமலை, பல்லடம் நகராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த அடிப்படையில் தினக்கூலியை உயர்த்தி வழங்கவும் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ஆட்சியர் உத்தரவும், நடைமுறையும்
எந்த வகையில் பார்த்தாலும் திருப்பூர் மாநகராட்சியில் தினக்கூலி ஒப்பந்தப் பணி யாளர்கள் நிலை மிக மோசமாகவே உள் ளது. அதேபோல் தான் திருப்பூர் மாவட்டத் தில் உள்ள உடுமலை, பல்லடம், வெள்ளகோ வில், காங்கேயம், தாராபுரம் ஆகிய ஐந்து நகராட்சிகளின் நிலையும் உள்ளது. இங்கும் ஒப்பந்ததாரர்கள், தினக்கூலி பணியாளர் களுக்கு தர வேண்டிய ஊதியத்தில் ஒரு பகு தியை பறித்துக் கொள்கின்றனர். எனவே ஒப் பந்தப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை ஒப்பந்ததாரர்கள் வழங்கு வதை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதியச் சட் டப்படி, தினக்கூலி பணியாளர்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்தி நிர்ணயித்து, சம்பந்தப்பட்ட உள் ளாட்சிகள் வழங்குவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி மாநகராட்சியில் நாளொன்றுக்கு ரூ.708 வீதம் வழங்க வேண்டும். நகராட்சிகளில் ரூ. 593 வீதமும் தர வேண்டும். அதுவும் வழங்கு வதில்லை, வழங்கும் சொற்ப ஊதியத்திலும் ஊழல் செய்து பறித்துக் கொள்ளும் நடை முறை உள்ளது. இதைக் களைய தமிழ்நாடு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்தரமே தீர்வு
நகரங்களின் தூய்மை, சுகாதாரம் பராம ரிப்பதும், மக்களுக்கு குடிநீர் வழங்குவதும் நிரந்தரமாக நடைபெறக்கூடிய அன்றாடப் பணியாகும். இந்த பணிகள் நிரந்தரமாக இருக்கும்போது, இந்த வேலை செய்யக் கூடிய பணியாளர்கள் மட்டும் நிரந்தரம் அற்ற வர்களாக, ஒப்பந்த அடிப்படையில் நியமிப் பது எந்த வகையில் சரியானதாக இருக் கும்? எனவே திடக்கழிவு மேலாண்மை, சுகா தார பணியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும். அதில் வேலை செய்யும் பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் மூலம்தான் அவர்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதியைக் களைய முடி யும், வாழ்வதற்கு கண்ணியமான ஊதியமும் பெற முடியும். நகரங்களும் உண்மையா கவே தூய்மையாக, சுகாதாரமாக இருக் கும். இந்த விசயத்தில் தமிழக அரசு ஆக்கப்பூர் வமான, அக்கறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் வலியுறுத்தி கேட் டுக் கொண்டுள்ளார்.