districts

img

பணி நிரந்தரம்: ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

சேலம், ஜன.1- எம்ஆர்பி தகுதி தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி சேலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப் படையில் செவிலியர்கள் 31 மாதங்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் எந்தவித முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஒப்பந்த காலத்தில் 6 மாத  காலம் ஊதியம் வழங்காமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும். முறை யாக எம்ஆர்பி தகுதி தேர்வின் அடிப் படையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தம் செய்ய  வேண்டும். இதுதொடர்பான தேர்தல்  வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து சேலம் டவுன் காவல் துறையி னர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, போராட் டக்காரர்களை அங்கிருந்து வெளி யேற்றினர். இதன்பின் ஒப்பந்த செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாட்டாண்மை கட்டிடம் முன்பு சாலை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது போராட்டத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும். இல்லை யென்றால் கைது செய்வோம் என போலீ சார் தெரிவித்தனர். ஆனால், “எங்க ளுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும் வரை, போராட்டத்தில் ஈடுபடுவோம்” என ஒப்பந்த செவிலியர்கள் தெரி வித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.