உடுமலை, நவ.20- உடுமலை வனப் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக நோயா ளியை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலநிலையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா, மேற்கு தொடர்சி மலைப் பகுதியில் 18 மலைவாழ் மக்கள் குடி யிருப்புகள் உள்ளன. மலையடி வார பகுதியிலிருந்து இந்த குடி யிருப்புகளுக்கு, காட்டுபகுதியில் இருக்கும் ஒற்றை அடி பாதையில் தான் நடந்து செல்ல வேண்டும். இப் பகுதி மக்கள் தங்களின் தேவைக ளுக்கும் குழந்தைகளின் படிப் புக்கும் நடந்து தான் சென்று வரு கின்றனர். தங்களின் அடிப்படை தேவைக்களுக்கு என்று மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதை அமைக்க வேண்டும் என வலியு றுத்தி, கடந்தாண்டு உடுமலை வன அலுவகத்தின் முன்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் தொடர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக திருமூர்த்தி மலைப்பகுதியில் இருந்து குரு மலை மலைவாழ் மக்கள் குடியி ருப்புக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனக் குழு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தொடர்ந்து தளி பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில், சாலை அமைக்க ரூ.44 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு, சாலை போட சென்றவர்களை வனத்துறையினர் தடுத்த காரணத்தால் சாலை அமைக்கும் பணி தடைபட்டுள்ளது. இந்நிலையில், குருமலை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி யைச் சேர்ந்த சுமதி என்ற இரண்டு மாத கர்ப்பிணிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், மருத்துவ மனைக்கு செல்ல, குடியிருப்பு பகு தியிலிருந்து மலைஅடிவாரப் பகு திக்கு அவரது உறவினர்கள தொட்டில் கட்டி தூக்கி வந்துள்ள னர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வாக னங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என்று வன உரி மைக்குழு, மாவட்ட ஆட்சியர் மற் றும் வனத்துறை சார்பில் ஏற்றுக் கொண்டபடி, சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க விடப்பட்ட டெண் டர்படி, சாலை வசதி நடை முறைக்கு வந்திருந்தால் புதனன்று மருத்துவ தேவைக்கு, குருமலை யில் இருந்து மலையடிவாரப் பகு திக்கு சுமார் நான்கு மணி நேரம் மலைப்பகுதியில் தெட்டில் கட்டி தூக்கிவர வேண்டிய நிலை ஏற் பட்டிருக்காது, என்றனர். சுதந்திர நாட்டில் எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்த இம்மக்களுக்கு, மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல போராட்டத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்த லில் வாக்குரிமை உள்ளிட்ட சில அடிப்படை வசதிகள் கிடைத்துள் ளன. ஆனால், இன்னும் வீடுகள், கல்வி, சுகாதாரம் மற்றும் மலை யில் விளையும் பொருட்களை விற் பனை செய்ய முறையான சந்தை வசதி உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு, நவீன உலகில் மருத்துவ தேவைக்கு தொட்டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலையே சாட்சியாக உள்ளது.