கோவை, ஜூன் 27- சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பொழிவு உள்ளதால் சிறுவாணி அனையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயர்ந்துள் ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அங் குள்ள பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. தமிழக கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிக ரித்து வருகிறது. சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்த்தேக்க கொள்ளளவு 45 அடியாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11.32 அடி யாக இருந்த நிலையில், ஒரே நாளில் 3 அடி உயர்ந்து செவ்வாயன்று 14.53 அடி யாக இருந்தது. இது புதனன்று நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்த தால் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து வியாழ னன்று நீர்இருப்பு 18.89 அடியாக உள் ளது. கோவை மாநகர மக்களின் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத் தில் தென்மேற்குப் பருவமழை தீவிர மடையும் பட்சத்தில் நீர்பிடிப்பு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தால் சிறு வாணி அணை விரைவில் முழு கொள் ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் காரணமாக கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவை ஓர ளவு பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பது கோவை மாநகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.