districts

img

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

தருமபுரி, ஆக. 22- காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தினர், இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் அலுவல கங்கள் வெறிச்சோடி காணப்பட் டது. ஊரக வளர்ச்சித்துறையில் அணைத்துநிலை காலிப்பணி யிடங்களையும் நிரப்ப வேண்டும், மக்கள் நலத் திட்டங்களுக்கு போது மான ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு விடுபட்ட உரிமைகளை வழங்கவேண்டும், கணினி உதவியாளர்கள், மாவட்ட, வட்டார திட்டஒருங்கிணைப் பாளர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ள அனை வரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், இணை இயக்குநர் பணி யிடங்களில் ஆட்சிப்பணி அலுவலர் கள் நிலையில் மேற்கொள்ளும் பணி நியமனங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், உதவி இயக்கு நர் நிலையில் நேரடி நியமனங் களை அனுமதிக்கப்பட்ட பணியி டங்களில் பத்து சதவிகிதத்திற்கு மிகாமல் நிரப்ப வேண்டும் உள் ளிட்ட 20-அம்ச கோரிக்கைளை இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் காரணமாக, தருமபுரி மாவட்டம் முழுவதும் பிடிஒ அலுவலகங்கள் காலியாக இருந்தது. ஒட்டு மொத்த தற்செ யல் விடுப்பு போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் ஊரக  வளர்ச்சித்துறையில், பணிபுரிவர்க ளின் எண்ணிக்கை 511, தருமபுரி மாவட்ட ஊரகவளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் அலுவலகம், பிடிஒ அலுவலகம் என மொத்தம்  638 பணியிடங்கள் உள்ளன. இதில்  காலிப்பணியிடங்கள் 131 இன்று தற்செயல் விடுப்பு போராட் டத்தில் 318 பேர் ஈடுபட்டுள்ள னர். ஒட்டு மொத்த ஊழியர்களில் 62 சதம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட் டத்தால் மாவட்டத்தில் பல  பிடிஒ அலுவலகங்கள் பூட்டியுள் ளன. சில அலுவலகங்கள் காலி நாற்காலியிடன் வெறிச்சோடி இருந் தன.