இ - பைக் நிறுவனம் ரூ.13.65 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல், அக்.17- நாமக்கலில் இ பைக் நிறுவனம் பொருத்தியிருந்த பேட்டரிகளுக்கு மூன்றாண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது, இருந்தபோதிலும் செயலிழந்த பேட்டரி வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மாற்றி வழங்காத நிறுவ னத்திற்கு ரூ.13.65 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் இ.பி. காலனியில் வசிக்கும் ஹரிச்சந்திரன் மனைவி தாரணி (25), நல்லி பாளையத்தில் வசிக்கும் நல்லுசாமி மனைவி என். கமலா (36), குமாரி பாளை யத்தில் வசிக்கும் என்.ராமநாதன் (57), நல்லி பாளையத் தில் வசிக்கும் ஜெயக்குமார் மனைவி சுமதி (45), நாமக் கல் வலையபட்டி அருகே உள்ள வடுகப்பட்டியில் வசிக்கும் கணேசன் மகன் ஜி. பிரசாந்த் (26), சேந்தமங்க லம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, தெற்கு திருமலை கிரியில் வசிக்கும் ஜி.எஸ்.கோகுல்ராஜ் (34), சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி யில் வசிக்கும் ஜி.பிரபாகரன் (47) ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் உள்ள ராயல் இ.வி. பைக்ஸ் என்ற நிறுவனத்தில் பேட்டரி யால் இயங்கும் மின்சார பைக் வாங்கியுள்ளனர். இந்த மின்சார பைக்கிற்க்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பியூர் எனர்ஜி பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார பேட்டரியால் இயங்கும் பைக்குகளை ராயல் இ.வி. பைக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வாகனங்களை விலைக்கு வாங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே வாகனத்தின் பேட்டரி செயல் இழந்து வாகனத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாகனத்தை விற்பனை செய்த டீலரான ராயல் இபி பைக் நிறு வனத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் பொருத்தி யிருந்த பேட்டரிகளுக்கு மூன்றாண்டு காலம் வாக னத்தை தயாரித்த நிறுவனத்தால் உத்தரவாதம் வழங்கப் பட்டிருந்தது. இருந்தபோதிலும் செயலிழந்த பேட்டரி களை வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வாடிக் கையாளர்களுக்கு மாற்றி வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக னத்தை உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீதும் விற்பனை செய்த டீலர் மீதும் வழக்கு தாக்கல் செய்தனர். மின்சார பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வாங்கிய வாடிக் கையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்கு களிலும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் உற்பத்தி குறைபாடு உள்ள பேட்டரிகளை கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட வாடிக் கையாளர்களுக்கு, மின்சார பைக்கை வாங்க செலுத் திய தொகை மற்றும் ஒவ்வொருவருக்கும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தையும் வழக்கின் செலவு தொகையாக ரூ. 10 ஆயிரம் என 13.65 லட்சம் ரூபாய் வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்க வும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது.
இளைஞரை வெட்டிய இருவர் கைது
கோவை, அக்.17- கொலைக்கு பழிக்கு, பழி வாங்க இளைஞரை ஓட, ஓட வெட்டிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்ராஜ் இவ ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவ ருக்கும் பணம், கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்து உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெகன் ராஜை, மதன்ராஜ் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட் டார். இந்நிலையில், கொலை வழக்கில் இருந்து மதன் ராஜ் ஜாமினில் வெளியே வந்தார். வியாழனன்று மாலை குரும்பபாளையம் பகுதியில் இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டு இருந்த மதன்ராஜை, வழிமறித்த சித்திரை குமார் மற்றும் முருகன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கடுமையாக தாக்கினர். இதில், கை, தலை, முகம் போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் தப்பி ஓடி னர். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையின ருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை யினர் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய ஜெகன்ராஜின் அண்ணன் சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் கணவரை பார்க்க அனுமதி மறுப்பு
கோவை, அக்.17- கோவை மத்திய சிறையில் கணவரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால், மனமுடைந்த பெண் பிளேடால் கையை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களைப் பார்க்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்கு பிறகு அனுமதி அளிப்பார் கள். இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரைப்பார்ப்பதற்கு அவரது தாய் மற்றும் மனைவி மீனம்மாள் புதனன்று வந்திருந்த னர். கைதிகளை பார்க்க வரும் உறவினர் கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் சரி பார்த்த பின்னர் உள்ளே பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின் றனர். ஆனால், முத்துராஜ் மனைவி மீனம் மாள் ஆதார் அசல் அட்டை கொண்டு வரா ததால் போலீசார் உள்ளே சென்று பார்க்க அனுமதி மறுத்து உள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த பெண், பிளேடால் தன் கையை அறுத்துகொண்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றியமைப்பு
புதுதில்லி, அக்.17- கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ரூ.2,425 ஆக நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட் டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற் கான அனைத்து ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுகு மற்றும் கொண்டை கடலைக்கான எம்எஸ்பி முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 மற்றும் ரூ. 5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ.300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ. 210 உயர்த்தப்பட்டுள்ளது. மைசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700க்கு கொள்முதல் செய்யப் படும். பார்லி குவிண்டாலுக்கு ரூ. 130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என ஒன் றிய அரசு தெரிவித்துள்ளது.
நாளை குறைதீர் முகாம்
திருப்பூர், அக்.17– பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சனியன்று (நாளை) நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் சனி யன்று (நாளை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீர்ப்பு முகாம் நடை பெறும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளார். அதன்படி, அவிநாசி தண்டுக்காரன்பாளையம், தாராபுரம் கெத்தல்ரேவ், காங்கேயம் வி.வடுகபாளையம், மடத்துக்குளம் கொழுமம், பல்லடம் பொங்கலூர், திருப்பூர் வடக்கு செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு மாணிக்காபுரம், உடுமலை குடிமங்கலம் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், ஊத்துக்குளி கவுத்தாம் பாளையத்தில் கூனம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டு றவு கடன் சங்கத்திலும் நடைபெறும். இம்முகாமில் பொதுமக் கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுவது, நகல் அட்டை கோருவது உள்ளிட்ட கோரிக்கை களுக்கு மனு செய்து பயனடையலாம்.
ஆடுகள் பலி: விவசாயி கவலை
சேலம், அக்.17- எடப்பாடி அருகே அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில், 10 ஆடுகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட விவ சாயி கவலையடைந்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம் பாளையம், பாறைக்காட்டுமேடு பகுதியைச் சோ்ந்தவர் செல்வராஜ் (50). விவசாயி-யான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை இரவில் தனது வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு, தூங்கச் சென்றார். இந்நிலையில், புதனன்று அதிகாலை நேரத்தில் அப்பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத விலங்கு, பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைக் கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. சத்தம் கேட்டு வந்த செல்வராஜ், ஆடுகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை துறை யினர், வருவாய்த்துறை அலுவலர்கள் உயிரிழந்த ஆடுக ளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
தருமபுரி, அக்.17- தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை மாநாடுகள் நடைபெற்று, கிளை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரூர் ஒன்றியம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டப்பட்டி கிளைச் செய லாளராக வி.வெங்கடேசன், நமங்காடு - எஸ்.அண்ணா மலை, வீரப்பநாய்கன்பட்டி - கே.முருகன், காட்பாடி - ராமலிங் கம், ஈட்டியம்பட்டி - மாரியப்பன், கீழானூர் - செம்பன், சங்கிலி வாடி ஏ.கிளைச் செயலாளராக நீலமேகம், பி.கிளைச் செயலா ளராக இளையராஜா, தூரணம்பட்டி - தேவன், சோரியம் பட்டி - ஏ.நேரு, அண்ணா நகர் - லூர்துமேரி, எச்.தொட்டம் பட்டி - பாரதிதாசன், பறையப்பட்டி -ஸ்டாலின், கே.வேட்டரப் பட்டி - புத்தன், கரிபிலிப்பட்டி - ராமு, எஸ்.பட்டி கிளைச் செயலா ளராக ஜெயகாந்தன், பி.கிளைச் செயலாளராக ராம மூர்த்தி, அரூர் சி.கிளைச் செயலாளராக ஞானசேகரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். ஏரியூர் ஒன்றியம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட மூலபெல்லூர் கிளைச் செயலாளராக ராஜா, ஏமானூர் - அசோகன், கொண்டைய னூர் - கோவிந்தராஜ், குருக்கலையனூர் - சாமிகண்ணு, உடை யான்காது கிளைச் செயலாளராக கோவிந்தராஜ், செல்ல முடி - அசோகன், நெருப்பூர் கிளைச் செயலாளராக ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பென்னாகரம் ஒன்றியம் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஏ.கிளைச் செயலாளராக முனுசாமி, பி.கிளைச் செயலாளராக சக்தி, சி.கிளைச் செயலாளராக சேகர், பெரியபள்ளத்தூர் - சுப் பிரமணி, பொச்சாரம்பட்டி ஏ.கிளைச் செயலாளராக சின்ன சாமி, பி.கிளைச் செயலாளராக முனிராஜ், சி.கிளைச் செயலா ளராக தங்கவேல், தாதம்பட்டி - அம்பிகா, கள்ளிபுரம் - கமலா, மருக்காரம்பட்டி - ரமேஷ், பவளந்தூர் - சிலம்பரசன், நாக னூர் கிளைச் செயலாளராக பெரியவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பென்னாகரம் கிழக்கு ஒன்றியம் சின்னகடமடை கிளைச் செயலாளராக என்.சக்திவேல், சின்னகடமடை மாதர் கிளைச் செயலாளராக சாரதா, வரூரா னன்கோட்டை - கந்தசாமி, கட்டை ஜீவா நகர் - அன்பு, பெரிய கடமடை ஏ.கிளைச் செயலாளராக ஏ.கோவிந்தராஜ், பி. கிளைச் செயலாளராக பி.முனிராஜ், செஞ்சிமலைகாடு - சர வணன், ஒண்டிக்கோட்டை - தேவர், போடளான்காடு - சின்ன தம்பி, தளிஅள்ளி ஏ.கிளைச் செயலாளராக அன்பரசு, பி. கிளைச் செயலாளராக சிவக்குமார், போடல்பட்டி - மாரியப் பன், நரசிபுரம் - ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இம்மாநாடுகளில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பருவ மழை முன்னேற்பாடு: அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்
உதகை, அக்.17- நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து, முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும். என அமைச்சர் சாமிநாதன் அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தமி ழக விருந்தினர் மாளிகையில் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணி கள் குறித்து ஆய்வு கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, அனைத்து துறை அலுவலர்களிடம் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணி கள் குறித்து கேட்டறிந்தார். பின், முன் னேற்பாடு பணிகளை விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும். என அறிவுறுத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், மலை மாவட்டமான நீலகிரியில் வடகிழக்கு பருவமழை முன் னேற்பாடு குறித்து அனைத்து துறை அதி காரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற் றது. பொதுமக்களுக்கு எவ்வித இடை யூம் இல்லாமல் முன்னேற்பாடு பணி கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட் டது. மாவட்ட நிர்வாகம் முன்னேற் பாடு பணிகளை திருப்திகரமாக மேற் கொண்டு உள்ளனர். 283 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளை தீவிரமாக கண் காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. என்றார். இதில், அரசு கொறடா ராமச்சந்தி ரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
எரிவாயு உருளையுடன் நிதிமன்றத்திற்கு வந்தவரால் பரபரப்பு
கோவை, அக்.17- எடை குறைவாக இருக்கிறது நுகர் வோர் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மல் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கி உள்ளார். பொதுவாக வீட்டுக்கு பயன்படுத் தும் ஒரு கேஸ் சிலிண்டரின் மொத்த எடை 30 கிலோ 100 கிராம் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் எடை 27 கிலோ 700 கிராம் தான் இருந்தது. இதற்கு முன் இதே போன்று அவரது வீட் டிற்கு இரண்டு முறை எடை குறைவாகவே காஸ் சிலிண்டர் விநியோகமானது. இது குறித்து அவருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு கேட்டார். அவர் சரியான பதில் அளிக்கவில்லை, இதனால், அவர் இது குறித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதான விசாரணை வந்தது, எனவே எடை குறைவாக சமையல் கேஸ் சிலிண்டரை நீதிமன்றத்திற்கு ஆதாரத்திற் காக கொண்டு வந்தார். அந்த சிலிண்டர் ஒரு ஆண்டுக்கு மேலாக சீல் உடைக்காமல் பாது காப்பாக வைத்து இருந்தார். எனவே விரை வில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என் றார்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது
சேலம், அக்.17- பள்ளி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கிச்சிப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (22) என்பவர், 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டிலிருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப் போது அந்த மாணவியை, வீரமணி தனது இருசக்கர வாகனத்தில் கொல் லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென் றார். அவருடன் மற்றொரு இருசக் கர வாகனத்தில் வீரமணியின் நண்பர் களான கல்லூரி மாணவர்கள் கவியர சன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர். இதன்பின் கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதி யில் அறை எடுத்து அந்த மாணவியு டன் வீரமணி தங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த மாணவியை வீட் டில் இறக்கி விட்டு சென்றார். இதனை யறிந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வ தாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சேலம் நகர காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வா ளர் கலைவாணி, மாணவியை பாலி யல் வன்கொடுமை செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவிய ரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து கைது செய்தார். தொடர்ந்து 3 பேரையும் நீதிபதி முன்பு நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.