districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காப்பீட்டுத் தொகை தர மறுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர், நவ.30 - திருப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்ததற்கு காப்பீட்டுத் தொகை தர மறுத்த யுனைடெட் இந் தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப் பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தை பாதிக் கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பழனியம் மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பி.நிர்மலா. அரசுப்பள்ளி ஆசிரியர் என்ற முறையில் அரசுத்  திட்டத்தின் மூலம் யுனைடெட் இந் தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு செய்து வந்தார். அதற்குரிய காப்பீட்டுத் தொகை ஆசிரியரின் மாத ஊதியத்தில் பிடித் தம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அவரது கணவர் கே.பாலகி ருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக  கோவையில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு பாலகிருஷ்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. இதற்குரிய செலவுத் தொகை  ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வழங் கும்படி யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப் பித்தார். ஆனால் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், பால கிருஷ்ணன் “அவசர சிகிச்சை” பெற வில்லை. தங்கள் காப்பீட்டு நிறுவனப்  பட்டியலில் இல்லாத மருத்துவம னையில் சிகிச்சை பெற்றதால் இழப் பீடு தர முடியாது என்று கோரிக் கையை நிராகரித்துவிட்டது. இதனால் பொருட்செலவுடன் மன உளைச்சலுக்கும் ஆளான நிர் மலா, அரசு காப்பீடு என்பதால் திருப் பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட் டிருக்கிறார். ஆட்சியரகத்திலும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திருப்பூர் நுகர்வோர் நீதி மன்றத்தில் ஆசிரியர் நிர்மலா, இழப் பீடு கோரி விண்ணப்பித்தார். இந்த வழக்கை விசாரித்த திருப் பூர் நுகர்வோர் நீதிமன்றம், நோயாளி  சிகிச்சை பெற்றிருக்கிறாரா என்பது தான் முக்கியம், அதற்குரிய மருத் துவ ஆவணங்களை சமர்ப்பித்திருக் கும் நிலையில், உரிய காப்பீட்டுத்  தொகையை வழங்க வேண்டும். பட்டி யலில் இல்லாத மருத்துவமனை என் பதற்காக கோரிக்கையை நிராக ரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டினர். அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை 3 மாதங் களில் வழங்க வேண்டும், தவறினால்,  உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து தாமதிக்கும் காலத்திற்கும் சேர்த்து 8  சதவிகித வட்டித் தொகையுடன் இழப் பீடு வழங்க வேண்டும் என்று திருப்பூர்  நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரி யர் நிர்மலா தரப்பில் மூத்த வழக்கறி ஞர் வை.ஆனந்தன் வாதாடினார்.

பத்திரப்பதிவு துறையின் புதிய விதிகளால் பொது மக்கள் அவதி

உடுமலை, நவ.30- நிலம் மற்றும் வீட்டுமனைகளின் அசல் பத்திரங்கள் காணவில்லை எனில், அதன் நகல் பத்திரம் பெற  காவல்துறையின் பரிந்துரை கடிதம்  வேண்டும் எனும் புதிய விதியால்  பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ளாகின்றனர். பத்திரப்பதிவுத் துறையின் புதிய  விதிகளின்படி, நகல் பத்திரம் பெற  காவல்துறையின் பரிந்துரை கடிதம்  இருந்தால் மட்டுமே நகல் ஆவணம்  வழங்கப்படும் என கூறப்படுகிறது.  முன்னர் ஆவணம் தவறவிட்டவர் கள் நாளிதழ்களில் காணவில்லை என விளம்பரம் செய்த பின், வில்லங் கம் இல்லாத நிலையில் புதிய நகல்  ஆவணம் வழங்கப்படும். ஆனால்  தற்போதைய புதிய விதிகளால், ஆவ ணங்களை தவறவிட்டவர்கள் காவல் துறையில் புகார் தெரிவிக்கையில், அவர்கள் கேட்கும் பலவிதமான ஆதரங்களை சமர்ப்பித்தும், பரிந் துரை கடிதம் பெற முடியாத நிலையே  உள்ளது. இதனால் ஆவணங்களை தவற விட்டவர்கள் பல விதமான மன  உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். மேலும், வீண் கால தாமதம் மற்றும்  பண விரயம் ஏற்படுகிறது. பொது  மக்களை பெரிதும் பாதிக்கும் வகை யில் இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உடனடியாக நகல் ஆவணங்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற கோரிக்கை

திருப்பூர், நவ.30- கட்டுமானத்திற்குத் தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலையை கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் உயர்த்தி இருப்பதற்கு கட்டுமானத் துறை சார்ந்த பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரி மையாளர்கள், சிவில் இன்ஜினியர்கள் சங் கம், பில்டர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட பல் வேறு அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் வெள்ளியன்று ஆட்சியரிடம் மனு  அளித்தனர். தமிழக முழுவதும் சுமார் 450 கிரசர்க ளுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் உற்பத்தி  செய்ய முறையாக அனுமதி வழங்கப்பட்டுள் ளது. ஆனால் 200க்கும் மேற்பட்ட கிரசர்கள் அனுமதி பெறாமல் தரமற்ற கற்களை அரைத்து எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் தயா ரித்து விற்பனை செய்கின்றனர். கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கடந்த ஆறு மாதங்க ளுக்கு முன்புதான் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையை உயர்த்தி அதிக விலைக்கு  விற்று வந்தார்கள். கடந்த நவ.25 ஆம் தேதி  கரூரில் நடைபெற்ற கல்குவாரி கிரசர் உரிமை யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வரும் டிச.1 ஆம் தேதி முதல் ரூ.3ஆயிரத்து 800 க்கு  விற்பனை செய்து வந்த எம்.சாண்ட் ரூ.1200  உயர்த்தி ரூ.5 ஆயிரம் ஆகவும், ரூ.5 ஆயிரத் துக்கு விற்பனை செய்து வந்த பி.சாண்ட் ஆயி ரம் உயர்த்தி ரூ.6 ஆயிரம் ஆகவும், ரூ.3 ஆயி ரத்திற்கு விற்பனை செய்து வந்த ஜல்லியை  ரூ.4 ஆயிரம் ஆகவும், இத்துடன் 5 சதவீதம் ஜி. எஸ்.டி சேர்த்து விற்கப்படும் என அறிவித் துள்ளனர். இது நடைமுறைப்படுத்தப்பட் டால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட் டுமான பொறியாளர்கள், கட்டிட தொழிலா ளர்கள், கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும்  ஏழை எளியோர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். கட்டுமானத் தொழில் முழு வதும் இந்த விலை உயர்வால் முற்றிலும் முடங்கி போகும். எனவே கல்குவாரி உரி மையாளர்கள் இதை உடனடியாக திரும்ப  பெற அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட னர்.

மதுபானக்கடையை அகற்றக்கோரி மறியல்

மதுபானக்கடையை அகற்றக்கோரி மறியல் நாமக்கல், நவ.30- சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுக்கடை மற்றும் அரசு மதுபானக்கூடத்தை அகற்றக்கோரி பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், பள்ளிபாளையம் வட்டாரப்பகுதி முழுவதும் அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும், அதிகாலை நேரத்திலேயே மதுக்கடை மற்றும் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. மேலும், சந்து கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மது  விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால் ஏழை, எளிய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக்கூறி, சனியன்று அப் பகுதி பொதுமக்கள் ஜீவா செட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலை மையிலான போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது, மதுபானக்கடை களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி யளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குறைதீர் கூட்டத்தின்போது, விவசாயி தற்கொலை முயற்சி

குறைதீர் கூட்டத்தின்போது, விவசாயி தற்கொலை முயற்சி சேலம், நவ.30- நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, குறைதீர் கூட் டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், ஆட்சியர் கூட்டரங்கில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய பொருட்கள் குறித்து  கோரிக்கை மனு அளித்து, விவரங்களை கேட்டறிந்தனர். அப் போது, தலைவாசல் அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத் தில் 75 சென்ட் நிலத்தை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து ஐந்து வருடங்களாக புகார் மனு  அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மன உளைச்சல் அடைந்து, தான் கையில் வைத்தி ருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரிடம் இருந்த பையை பறி முதல் செய்து சமாதானப்படுத்தினர். இதனால் குறைதீர் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாகனங்கள் ஏலம்

வாகனங்கள் ஏலம் நாமக்கல், நவ.30- குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சம்மந்தமான குற் றங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரு நான்கு சக்கர வாக னம், 24 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பொது ஏலம் விடும் நிகழ்வு சனியன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் நடைபெற்ற ஏலத்திற்கு பலர் வந்திருந்தனர்.