districts

விபத்தில் இறந்த லாரி உரிமையாளரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், அக். 5 - விபத்தில் உயிரிழந்த லாரி உரி மையாளருக்கு இழப்பீடை தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், விபத் தில் இறந்த லாரி உரிமையாளரின் குடும்பத்துக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்க, நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நாமக்கல் மாவட்டம், ஏ. எஸ். பேட்டையில்   வசித்து வந்தவர் சண்முகம் (59). லாரி போக்குவ ரத்து தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 2023 ஆகஸ்ட் 14 நாமக்கல் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள் ளார். அப்போது பள்ளி வாகனம் மோதியதில் பலத்த காயமுற்றார். அவசர சிகிச்சைக்காக நாமக்கல் லில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்  மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூ ரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சண்முகம் கடந்த 2023 செப்டம்பர் 5 அன்று இறந்து விட்டார். நாமக்கல் லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் விபத்தில் இறந்த சண்முகம் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சங்க உறுப்பினர்க ளுக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்   ஆக்சிடென்ட் இன்சூ ரன்ஸ் பாலிசியை பிரீமியம் பெற் றுக் கொண்டு வழங்கியிருந்தது. சண்முகத்தின் இறப்புக்குப் பின்னர் அவரது மனைவி மற்றும் குழந்தை கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 10 லட்சத்தை வழங்குமாறு விண்ணப் பம் செய்துள்ளார்கள். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் சண்முகத் தின் இறப்புக்கு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணம் அல்ல என்றும் அவருக்கு இருந்த நோய்தான் கார ணம் என்றும் கூறி இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுத்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயலால் அதிர்ச்சியடைந்த சண் முகத்தின் மனைவியும் அவரது வாரிசுகளும் இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் மீது கடந்த 2024 ஜூன் மாதத் தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் வழக்க றிஞர் ராஜ்குமாரை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவு பிறப்பித்தார். சமரச பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இன்சூரன்ஸ் நிறுவ னம் விபத்தில் இறந்தவரின் மனைவி மணி (56), மகன் சதீஷ் (33), மகள் உமா (31) ஆகியோ ருக்கு 15 நாட்களுக்குள் ரூபாய் 10 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டது.