districts

img

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

திருப்பூர், ஆக.24- வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி குறித்து அனைத்து  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை வீடு வீடாக  சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட மற்றும்  உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாலோசிக் கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் ஜன.1 ஆம் தேதியைத் தகுதி நாளாகவும், ஏப்ரல்1, ஜூலை1 மற்றும்  அக்டோபர் 1 ஆகியவற்றை தொடர்ச்சியான தகுதி நாட்களா கவும் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யும் நடை முறையைக் கடைப்பிடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக வாக்கா ளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025இல் முன்  திருத்த பணிகள் குறிப்பிட்ட காலவரையரைக்குள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18  வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்த்தல், வாக்கு சாவ டிகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்,  வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குறைபாடுகளை  சரி செய்தல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புகைப் படங்களில் தெளிவில்லாத புகைப்படங்களின் தரத்தை மேம்ப டுத்துதல், வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் தொடர் பான இதர பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.  இம்மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிக ளிலும் வாக்கு சாவடி நிலை அலுவலர்களால், பிஎல்ஓ ஆப்  என்ற கைப்பேசி செயலி மூலம் இப்பணி மேற்கொள்ளப் படும். இதையடுத்து அக். 29 அன்று வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல்  திருப்பூர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள்,  வருவாய் கோட்டாட்சியர் / சார் ஆட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்ப டும். அதனை தொடர்ந்து அக் 29 முதல் நவ.28 வரை வாக்காளர்  பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர் பான விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி அமைவி டங்களிலும் வழங்கலாம். அதன் அடிப்படையில் 2025  ஜனவரி 6 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும் என தெரிவித்தார்.