தருமபுரி, செப். 6 - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ வாக்குசாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி, தலைமை யில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கடந்த 29.08.2024 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகள் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக் குசாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வாக்குசாவ டிகளை மறுசீரமைப்பது தொடர்பான கோரிக்கைகளை 29.08. 2024 முதல் 04.09.2024 வரை வழங்க தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை களை பெற்றும், அலுவலர்கள் மேற்கொண்ட களஆய்வின் படியும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில ஐந்து சட்டமன்ற தொகு திகளில் மொத்தம் 1489 வாக்குச்சாவடிகள் இருந்தது. வாக்கு சாவடி மறுசீரமைப்பு பணியில் தற்பொழுது 11 புதிய வாக்குச் சாவடிகள்/புதிய பாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்குசா வடி மறுசீரமைப்பிற்கு பின்பு மாவட்டத்தில் மொத்தம் 1500 வாக்குசாவடிகளாக உயர்ந்துள்ளது. மேற்கண்ட விவரங்களின்படி வாக்குச்சாவடி மறுசீர மைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக புதுடில்லி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்பு தலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற் றங்கள் மேற்கொள்ளப்படும். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்ட அலு வலர் இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்ட அலுவலர், இரா. வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், தேர்தல் தனிவட் டாட்சியர் அ.அசோக்குமார், அனைத்து வருவாய் வட்டாட்சி யர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.