தொழில் உறவை மேம்படுத்திட ஆலோசனைக்கூட்டம்
அவிநாசி, அக்.10- அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிஐடியு - ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஆலோச னைக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பல வருடங்களாக துணி, செல்போன் உதிரி பாகங்கள், பேன்சி பொருட்கள் போன் றவை விசேஷ நாட்கள், ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட தினங்களில் கடை அமைத்து விற்பனை செய்து வரு கின்றனர். இந்த நிலையில் சாலையோர வியாபாரிக ளுக்கும், வணிகர் சங்கத்திற்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தொழில் உறவை மேம்படுத்திட காவல்துறையினர், வட்டாட்சியர், பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில், பேரூ ராட்சி செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வா ளர் கருப்புசாமி, காவல்துறையினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதில், சிஐடியு சார்பில் ஈஸ்வரமூர்த்தி, வேலுச்சாமி, ராஜ் மற்றும் ஏஐடியுசி சண்முகம், வணிகர் சங்க பிரதிநி திகள் முத்துக்குமார், கார்த்திகேயன், பழனிச்சாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தனியார் படகு சவாரி: திருமூர்த்தி அணையின் பாதுகாப்பு கேள்விக்குறி?
உடுமலை, அக்.10- தனியார் படகு சவாரியால், திருமூர்த்தி அணை யின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தமிழ்நாடு தென்னை விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தென்னை விவசாய சங்க திருப் பூர் மாவட்டத் தலைவர் அன்பில் சு.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது, உடுமலைப்பேட்டை வட்டம், தளி பேரூராட்சி எல்லையில் திருமூர்த்தி அணை உள்ளது. மேற்படி அணை 3.75 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் பாசன ஆதாரமாகவும்-பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது. இந்த அணையை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசால் மிகவும் தீவிரமான விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. திருமூர்த்தி அணையின் மேல் பகுதியில் கூட தண்ணீர் திறப்பு சமயங்களில் மட்டுமே சிலருக்கு மட்டுமே அனு மதி தரப்படுகிறது. மற்ற நேரங்களில் அணையின் மீது சாதாரண மாக பொதுமக்கள் நடந்து செல்வதற்குக் கூட அனு மதி கிடையாது. அது மட்டுமல்லாமல் பொதுமக் கள் மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணைப்பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மீன் காட்சியகம் மற்றும் கோவில் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் மட்டுமே அணையின் நீர் பரப்பில் பரிசல்கள் மூலம் சென்று மீன்பிடிப்பார்கள். மற்றபடி அணையின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உயிர் சம்மந்தமானதாக இருப்பதால் இப்படி கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரு கிறது. ஆனால் தற்பொழுது சில நாட்களாக அணைப் பகுதியின் அருகாமையில் தங்கும் விடுதி கட்டி வாடகைக்கு விட்டு பணம் கொழித்து வரும் - “கேம்ப் ஸ்பிளிண்டர் நேசனல் அட்வென்சரஸ்” என்னும் தனியார் நிறுவனம் - அணைப்பகுதியில் பகலிலேயே அனுமதியில்லை என்னும் நிலையில் தன்னுடைய விடுதியில் தங்குபவர்ளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரி களைத் தவிர - யாருக்குமே அனுமதியில்லாத அணையின் நீர்பரப்பு பகுதிகளில் எவ்வித அனுமதி யும், பாதுகாப்பும் இல்லாமல் படகுகளில் பயணம் கூட்டி செல்வதும் - கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். அணைகள் பாதுகாப்பு சம்பந்தமான அரசு விதி முறைகளை மீறிய இந்த தனியார் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைப்படி அனுமதி பெற்று இந்த விடுதி செயல்படவில்லை எனில், அதை மூடி சீல் வைப்பதோடு, அதன் உரிமையாளர்கள் மீது அணை பாதுகாப்பு விதிகள்படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
சாலை விபத்து: ஓராண்டில் 800 பேர் பலி
சேலம், அக்.10- கடந்த ஓராண்டில் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 800 பேர் உயிரிழந்துள்ளனர், என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.தாமோதரன் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதனன்று, துணைவேந்தர் ரா.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.தாமோதரன் பேசுகையில், ஒவ்வொரு ஓட்டுநரும் போக்குவரத்தின் போது தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து சரியானவற்றை கற்றால் மட்டுமே அது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். சாலைப் பாதுகாப்பு உயிர் தொடர்பானது என்பதால், அனைவரும் நிச்சயம் விதிமுறைகளை முழுமையாக தெரிந்துகொண்டு மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் சாலையைக் கடப்பதால் ஆண்டொன்றுக்கு நாடு முழுவதும் 15 ஆயிரம் பேர் தங்களது உயிரை இழக்கிறார்கள். மேலும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உடல் அங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 800 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவு, கைப்பேசியில் பேசியபடி சென்றது, சாலை விதிமுறைகளை பின்பற்றாததால்தான் நிகழ்ந்துள்ளன. வாகனம் ஓட்டும் அனைவரும் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீட்டினை முறையாக வைத்திருக்க வேண்டும், என்றார்.
சிபிஎம் கிளை மாநாடுகள்
உடுமலை, அக்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலூகா கிளை மாநாடுகளில், செயலாளர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். இதன்படி நரசிங்காபுரம் கிளைச் செயலாளராக கருப்பு சாமி, வேடபட்டி கிளைச் செயலாளராக ராமலிங்கம், கொம ரலிங்கம் கிளைச் செயலாளராக ஆறுமுகம், ருத்திராபா ளையம் கிளைச் செயலாளராக வீராச்சாமி, கொழுமம் கிளை செயலாளராக சுந்தர்ராஜ், பெருமாள்புதூர் கிளைச் செயலா ளராக முத்துச்சாமி, ஜெ.ஜெ. நகர் கிளைச் செயலாளராக ஜான்கண்ணன், நீலம்பூர் கிளைச் செயலாளராக சதாசிவம், எஸ்.கே.புதூர் கிளைச் செயலாளராக தெண்டபாணி, மடத் துக்குளம் கிளைச் செயலாளராக ஆறுமுகம், மயிலாபுரம் கிளைச் செயலாளராக மகுடீஸ்வரன், கணியூர் கிளைச் செயலாளராக ராஜகோபால், கடத்தூர் கிளைச் செயலாளராக வெள்ளியங்கிரி, மலையாண்டி பட்டிணம் ( துங்காவி) கிளைச் செயலாளராக சைலாவதி, ரெட்டிபாளையம் கிளைச் செயலா ளராக பெரியசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு மற்றும் தாலுகா குழு தலைவர்கள் பங்கேற்றனர். மலைக்கமிட்டி கிளைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கமிட்டியின் கிளை மாநாடுகளில் புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இதன்படி குருமலை 1 கிளைச் செயலாளராக சர வணன், குருமலை 2 கிளைச் செயலாளராக வெள்ளையன், குரு மலை 3 கிளைச் செயலாளராக செல்வராஜ், மேல் குருமலை செயலாளராக சௌந்திரராஜன், குழிபட்டி கிளைச் செயலா ளராக மயில்சாமி, மாவடப்பு கிளைச் செயலாளராக சின்னான், திருமூர்த்திமலை 1 கிளைச் செயலாளராக காளிமுத்து, திருமூர்த்திமலை 2 கிளைச் செயலாளராக உஷாராணி, ஈசல் திட்டு 1 கிளைச் செயலாளராக திருமன், ஈசல்திட்டு 2 கிளைச் செய லாளராக பழனிசாமி அகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரி கைது
உடுமலை, அக்.10- விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற விவசாயிடம் மின் வாரிய அதிகாரி பணம் வாங்கிய போது, கொங்கல்நகர் மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புத னன்று கைது செய்தனர். பொள்ளாச்சி தாலூக்கா ஊஞ்சலம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராமனுக்கு சொந்தமான விவசாய நிலம் உடு மலை தாலூகா பொட்டையம்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நக ரத்தில் இருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தி ருந்தார். விண்ணப்பத்தை பரிசீலீக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, விவசாயி ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெய ராமன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்த நிலை யில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விவசாயி ஜெயராமன் லஞ்ச பணம் 2 ஆயிரம் ரூபாயை சத்தியவாணி வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிரேகா தலைமையி லான அதிகாரிகள் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய வாணியை கைது செய்தனர்.
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம், அக்.10- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை அமைச்சுப் பணியா ளர்களுக்கு வேலை நேரத்தினை காலை 10 மணி முதல் 5:45 மணி வரை என மாற்றி யமைக்க வேண்டும். காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பிஎட் முடித்த, தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ப.தர்மலிங்கம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.முத்துக்குமரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில துணைத்தலை வர் து.சிங்கராயன், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.கிரிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு
சேலம், அக்.10- பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சில மாதங்களாகவே ஆத்தூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதேபோல, ஆனைவாரி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. இதனால் முட்டல் ஏரி, அருவி, பூங்காவுக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறை தடை விதித்துள்ளது.