districts

img

திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம்: பொதுக்கழிப்பிடம் கட்டி தரக்கோரி சாலை மறியல்

திருப்பூர், பிப்.8- கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவ லம் தொடர்வதாகவும், உடனடியாக பொதுக்கழிப்பிடம் கட்டி தரக் கோரி வியாழனன்று சக்தி விநாயகர் பகுதி  மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுவாய் அருகே எல்லப்பாளை யம் பஞ்சாயத்துக்குட்பட்ட சக்தி விநாய கபுதூர் தலித் குடியிருப்பு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளனர். இப்ப குதியில் கழிப்பிட வசதி இல்லாததால்  மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன்ப டுத்தும் அவலம் உள்ளது. மேலும், பகல்  நேரங்களில் பெண்களும், குழந்தைக ளும் மலம் கழிக்க மிகவும் சிரமப்படு கின்றனர். இந்நிலையில், பொதுக் கழிப் பிடம் கட்டுவதற்கு புறம்போக்கு நிலம்  தேர்வு செய்யப்பட்டது. அங்கு பொதுக்  கழிப்பிடம் கட்டக் கூடாது என்றும், அந்த  இடம் தனக்கு சொந்தமானது என்று திமுக பிரமுகர்கள் தொடர்ந்து மறுத்து  வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை மீட்டுத் பொதுக்கழிப்பிடம் கட்டி தரக் கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டும் அதிகா ரிகள் கண்டு கொள்ளாத நிலையில், வியாழனன்று நூற்றுக்கும் மேற்பட் டோர் கொடுவாயிலுள்ள திருப்பூர் -  தாராபுரம் சாலையில் அமர்ந்து மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  அதிகாரிகள் இன்னும் இரண்டு நாட்க ளில் அந்த இடத்தை அளந்து கொடுக் கிறோம் என்று கூறியதையடுத்து சாலை  மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு  உறுப்பினர் சிவசாமி கலந்து கொண் டார்.