கோபி, ஜன.3- கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி வெள்ளியன்று துவங்கியது. ஈரோட்டில் கடந்த டிச.20 ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், அதற்கான தொடக்க பணிக்கான நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவம், கோபி திமுக தெற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளர் கள் எஸ்.ஏ.முருகன், ரவீந்திரன், மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.