districts

img

இடுவாய் அரசு ஆரம்ப பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

திருப்பூர், பிப். 3 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ரூ.41 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் கட்டும் பணி  வெள்ளியன்று தொடங்கியது. தமிழக முதல்வரின் மூலம் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக் கப்பட்ட சிறப்பு நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  இந்த பள்ளிக்கு ரூ. 41 லட்சம் ஒதுக்கினார். இதில் இரண்டு  பள்ளி அறைகள் மாடிப்படியுடன் கட்டும் வேலை துவங்கும்  நிகழ்வு நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளி தலைமை  ஆசிரியர் சரவணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பி.ஈஸ் வரி, ஆர்.ஈஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்க ளும், பள்ளி ஆசிரியர்களும், மேற்கால தோட்டம் நடராஜ், நாட் டாமை குமாரசாமி, ஊராட்சி செயலர் நாகராஜ், ஒப்பந்ததாரர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.