districts

img

70 லட்சம் நலவாரிய கணினித் தரவுகள் அழிந்துவிட்டது?

திருப்பூர், ஜன.4- தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்து வைத்திருந்த சுமார் 70 லட்சம் தொழி லாளர்களின் தரவுகள் கணினி சேமிப்பகத்தில் இருந்து முழுவதும்  அழிந்து விட்டதாக நலவாரிய வட் டாரத்தினர் தெரிவித்தனர். இத னால் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள கட்டுமானத் தொழிலாளர் மற்றும் உடல் உழைப்பு தொழிலா ளர்கள் உதவித் தொகை, ஓய்வூதி யம், பணப்பலன்கள் பெறுவதில் சிர மம் ஏற்படக் கூடும் எனத் தெரிகி றது.  திருப்பூரில் வியாழனன்று கட்டு மான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன் குமார் வருகை  தந்தார். அவர் திருப்பூர் மேட்டுப் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தொழிலாளர் நல  வாரிய அலுவலகத்தில் தொழிற் சங்க பிரதிநிதிகளிடன் ஆலோச னைக் கூட்டத்தில் கலந்து கொண்டு  குறைகள் மற்றும் கோரிக்கைக ளைக் கேட்டறிந்தார். கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு கட்டுமான நல வாரிய உறுப்பினர் டி.குமார் பங் கேற்றார். பெரும்பாலான தொழிலாளர் கள் பென்சன் தொகை கிடைப்பதில் காலதாமதம் மற்றும் புதிதாக பென் சன் விண்ணப்பம் செய்பவர்கள் மனுக்கள் தாமதமாவது குறித்து கோரிக்கையை முன்வைத்தனர். தொழிலாளர் நல வாரியத்தின் சார் பில் திட்டங்கள் அனைத்து தொழி லாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பணிகள் மேற்கொள்ளப் படும். கடந்த சில மாதங்களாக இருந்த சர்வர் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று பொன்.குமார் தெரிவித்தார்.

நலவாரிய தரவுகள் அழிந்து விட்ட நிலையில் கட்டுமான மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர் களை பதிவு செய்வது குறித்து பொன்.குமாரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. இப்போதைக்கு அனைவ ரையும் நலவாரியத்தில் மீண்டும்  பதிவு செய்ய மொத்தமாக அழைக்க வேண்டாம். நலவாரிய பணப் பலன், உதவித்தொகை, ஓய்வூதி யத்துக்கு விண்ணப்பிக்கும்போது அந்தந்த தொழிலாளர்களிடம் முறையான முழுமையான தரவுக ளைக் கேட்டுப் பதிவு செய்யலாம் என்று அவர் கூறினார். அதேசமயம் அரசுத் தரப்பில் தரவுகள் அழிந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் நலவாரியப் பலன்கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறி னர். அத்துடன், 70 லட்சம் தொழிலா ளர்களின் தரவுகள் அழிந்து விட்ட தாக கூறப்படுவது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது. இது போல் நடை பெற்றது ஐயப்பாட்டை  ஏற்படுத்துகிறது.  இந்த தரவுகள் அழிந் ததாகக் கூறப்படுவது குறித்து அரசு முழுமையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண் டும். தொழிலாளர்கள் நலவாரிய பலன்கள் பெறுவதில் இது இடையூ றாக, இழுத்தடிப்பதாக இருக்கக் கூடாது. உரிய மாற்று  வழிமு றையை உருவாக்கி தொழிலாளர் பலனடைய ஏற்பாடு செய்ய வேண் டும் என்று தொழிற்சங்கத்தினர் வலி யுறுத்தினர்.