திருப்பூர், ஜன.4 - 2023ஆம் ஆண்டு புத்தாண்டு தினத் தை புத்தகங்களுடன் கொண்டாடு வோம் என்று நடத்தப்பட்ட இயக் கத்தில் இந்திய அரசியல் சாசனம் நூல் அதிகளவில் விற்பனையானது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும், பின்னல் புத்த காலயமும் இணைந்து புத்தகங்க ளுடன் புத்தாண்டு கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தி ருந்தனர். டிசம்பர் 31ஆம் தேதி மாலை தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை புத்தாண்டு புத்தக விற்பனை நடை பெற்றது. இந்த நிகழ்வின்போது புத்தகம் வாங்குவோருக்கு சிறப்பு கழிவு வழங்கப்பட்டது. கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக் பங்கேற்று சிறப்பு புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அரசியல் சாசனம் புத்தகத்தை வாங்கினார். அவருக்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் அப்புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் பின்னல் புக் டிரஸ்ட் அறங்காவலர்கள் ஆர். ஈஸ்வரன், அ.நிசார் அகமது, பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பா. சௌந்தரபாண்டியன், புத்தக ஆர்வலர் என்.கோபாலகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர். மைதிலி, தெற்கு ஒன்றிய நிர்வாகி இ. அங்குலட்சுமி, புத்தக மொழிபெயர்ப் பாளர் மிலிட்டரி பொன்னுசாமி, தமுஎகச மாவட்ட பொருளாளர் ராம சாமி, வழக்கறிஞர் ஓ.உதயசூரியன் உட்பட பலர் பங்கேற்றனர். புத்தாண்டு தின புத்தக விற்பனை யில் பல்வேறு தலைப்புகளில் புத்த கங்கள் விற்பனையானது. குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் புத்தகம் அதிகளவில் விற்பனை செய்யப் பட்டது என்று பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பா.சௌந்தர பாண்டியன் தெரிவித்தார்.