காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆ.கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (டிச.25) சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமு பெற்றுக்கொண்டார். அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெ.வைத்தியலிங்கம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம், தொல்.திருமாவளவன், கே.சுப்புராயன், எம்.எச்.ஜவாஹிருல்லா, பாரதி கிருஷ்ணகுமார், சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நெய்பர்) நிறுவனத்தை துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புறநகரில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.