districts

img

தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

உடுமலை, மார்ச் 30 -  ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, புதனன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத் தின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தி  போராட்டம் நடத்தினர். ஒன்றிய பாஜக அரசு ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கியதை கண்டித்து நாடு முழுவதும்  காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உடுமலையில் மாவட்ட தலைவர் தென் னரசு தலைமையில் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத் தினர். இப்போராட்டத்தில், உடுமலை நகர தலைவர் ரவி,  நிர்வாகிகள் கோவிந்தராஜ், பலராமன், கிட்டுசாமி, கன்னு சாமி, முத்துகுமார் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர்  பங்கேற்றனர்.