districts

img

இந்திய அணிக்கு தேர்வான மங்கலம் வீரருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் நேரில் வாழ்த்து

திருப்பூர், ஜூன் 4- திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ரஹாரப் புத்  தூரை சேர்ந்த சாகுல்  அமீது மாற்றுத் திறனாளி கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வா கிகள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். நேபாளத்தில் வரும் ஜூன் 10 முதல் 12ஆம் தேதி முடிய டி20 கிரிக்கெட்  போட்டி நடைபெற உள்ளது. இந்த  தொடரில் இந்திய அணியின் சார்பில் விளையாடுவதற்கான அணித் தேர்வு செய்யபட்டது. இதில் சாகுல் அமீது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சாகுல் அமீது வீட் டிற்குச் சென்ற திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.ஜெயபால், மாவட்டச் செயலா ளர் பா.ராஜேஷ், மாவட்டப் பொருளா ளர் ஆர்.காளியப்பன் ஆகியோர் அவ ருக்கு சால்வை அணிவித்து வாழ்த் துத் தெரிவித்தனர். கோவை எம்பி வாழ்த்து இத்துடன், கோவை தொகுதி நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும் தொலை பேசி மூலம் சாகுல்அமீதை தொடர்பு கொண்டு அவ ருக்கு வாழ்த்து தெரிவித் தார். சிஐடியு சாலையோர வியாபா ரிகள் சங்க மாவட்டச் செயலாளர்  பி.பாலன், மங்கலம் பகுதி சிஐடியு  முன்னணி ஊழியர்கள்சாபி, பிலால்,  பசீர் அகமது மற்றும் அ.ப.பாலசுப்பிர மணியம் ஆகியோரும் உடனிருந்த னர்.