தருமபுரி, ஜூலை 24- தராசுகளில் முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்ப டுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தருமபுரி மாவட் டம், நல்லம்பள்ளி சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு முத்திரை இல்லாத தராசை பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் புதனன்று வாரச்சந்தை நடந்தது. இதில் தராசுகளில் முத்திரை இல்லாமல் சிறுகடை வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந் தது. அதைத் தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சேர்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் திவ்யா மதுரை ஆய்வாளர் அருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சேர்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் திவ்யா மதுரை ஆய்வா ளர் அருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு எடை கள் தராசுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை ஆய்வு செய்த னர். அதில் முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்தனர்.