அறந்தாங்கி, ஜூலை 24 - அறந்தாங்கி நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்ட் பயன்பாடுகள் இருக்கிறதா என நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் குடோன் சீல் வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ஆர்.வினோத் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வை யாளர்கள் குடோனை திறந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 755 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் சாப்பாட்டு இலைகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமை யாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.