சூலூர், பிப்.3- சூலூர் பகுதியில் 156 கிலோ எடையுள்ள கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், நீலாம்பூர் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதனடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சூலூர்- நீலாம்பூர் பகுதி யில் சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமார் (38) என்பவரை கைது செய்தனர். இவ ரிடமிருந்து ரூ.10,81,600 மதிப்புள்ள 156 கிலோ எடை கொண்ட 626 பாக்கெட்டுகள் கொண்ட 27,040 கஞ்சா சாக்லேட் டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து திலீப்குமாரை நிதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.