திருப்பூர், ஜன.7- தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த நிகழ்ச்சியை திருப் பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேரலையில் பார்வை யிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு உலக முத லீட்டாளர்கள் மாநாடு 2024யை தொடங்கி வைத்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரலையில் பார்வையிட்டு கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சார்பில் குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.111.5 கோடி மதிப்பிலான 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6,374.34 கோடி மதிப்பி லான 397 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நடுத்தர தொழில் நிறு வனங்கள் மூலம் ரூ.117.4 கோடி மதிப்பிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என மொத்தம் ரூ.6,603.24 கோடி மதிப்பிலான 439 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலை வர் கே.என்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்கும ரன், பிரிண்டிங் மற்றும் கயிறு குழுமங்களின் பிரதிநிதிகள், தொழில் சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.