districts

img

ஒன்றிய அரசின் விருதை நிராகரித்த கம்யூனிஸ்ட் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு இரங்கல்

திருப்பூர், ஆக. 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்த தேவ் பட்டாச்சார்யா, ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆதாயம் தேடும் நோக் கத்தில் வழங்கிய விருதை நிராகரித் ததைச் சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டப் பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று அவரது உருவப்படம் வைக்கப்பட்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூர் தெற்கு மாநகரம், தெற்கு ஒன்றியக் குழுக்கள் சார்பில் பி.ஆர்.நிலையம் முன்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே. உன்னிகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், இடுவாய்  ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணே சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. செல்லதுரை,  பி.லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் திருப்பூர் மாவட்டம்,  ஊத்துக்குளி நகரத்தில் வெள்ளி யன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்க தலை வர்கள் கலந்து கொண்டனர். பல்லடம் ஒன்றியக்குழு சார்பாக தோழர் புத்தாதேவ் பட்டாச்சார்யா நினைவஞ்சலி கூட்டம் வெள்ளியன்று 10 மணிக்கு பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் நடைபெற்றது. இதில் மூத்த தோழர் காஜாபாய் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு சார்பில் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரில் திருப்பூர் சாலையில் புத்ததேவ் பட்டாச்சார்யா இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி அணியினர் பங்கேற்று அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  15.வேலம்பாளையம் நகரக்குழு சார் பில் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், நகரக் குழு உறுப்பினர்கள் அ. ஆறுமுகம், பி.சின்னச்சாமி, ஆர்.சுகு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல போக்குவரத்து தொழி லாளர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்க ளில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.