கோவை, டிச.15- காங்கிரஸ் மூத்த தலை வர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன் மறைவையொட்டி, அனைத்துக்கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவரும், முன் னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் சனியன்று உயிரிழந் தார். அவரது மறைவையொட்டி கோவை காந்தி பார்க்கில் ஞாயிறன்று அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்விற்கு, காங்கிரஸ் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.எம்.சி.மனோகரன் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய லாளர்கள் பச்சமுத்து, விஜயகுமார், மாநில துணைத்தலைவர் எம்.என்.கந்தசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், மேற்கு நகரச் செயலா ளர் பி.சி.முருகன், சிபிஐ மாநிலப் பொருளா ளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சிவ சாமி, திமுக பகுதிச் செயலாளர் கார்த்திக் செல்வராஜ், மதிமுக நிர்வாகி அர்ஜுனன், விசிக கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனங்கூர் பிரிவு பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலத் திற்கு, காங்கிரஸ் நகரத் தலைவர் ஜானகிரா மன் தலைமை வகித்தார். நகராட்சி அலுவல கம் முன்பு உள்ள காந்தி சிலை அருகே ஊர் வலம் நிறைவு பெற்று, மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில், நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, திராவிடர் கழக சரவ ணன் உட்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.