districts

img

தோழர் யெச்சூரி-க்கு இரங்கல் தெரிவித்து தருமபுரியில் ஊர்வலம்

தருமபுரி, செப்.15- மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின்  மறைவிற்கு, இரங்கல் தெரிவித்து தரும புரியில் அனைத்துக்கட்சியினர் பங் கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் அகில  இந்திய முன்னாள் தலைவரும், நாடா ளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய பொதுச்செயலாளரு மான தோழர் சீத்தாராம் யெச்சூரி,  உடல்நலக்குறைவால் வியாழனன்று உயிரிழந்தார். கட்சிகளை கடந்து, அனைத்து தரப்பினரிடையே நன்மதிப் பைப் பெற்றவரும், பாசிசத்திற்கு எதி ரான போரில் தளபதியாக விளங்கிய, செங்கொடியின் புதல்வனுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அஞ் சலி செலுத்தி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக, தருமபுரியில் சனியன்று  அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற  ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. செங்கொடிபுரத்திலி ருந்து துவங்கிய இரங்கல் ஊர்வலம், ராஜகோபால் பூங்கா வழியாக சென்று  பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற கூட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார் தலைமை வகித்தார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, ஆர்.சிசுபாலன், தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா, காங்கிரஸ் மாவட்டத் தலை வர் தீர்த்தராமன், திமுக நகரச் செய லாளர் நாட்டான் மாது, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை  ஜெயராமன், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.தேவராசன் விசிக  மாவட்டச் செயலாளர்கள், த.கு.பாண்டி யன், சி.கே.சாக்கன் சர்மா, மதிமுக நிர் வாகி சுப்பிரமணி, இஸ்லாமிய கூட்ட மைப்பின் மாவட்டத் தலைவர் என்.சுபே தார், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலா ளர் கோவிந்தராஜ், புரட்சிகர சோஷ லிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் இ.பி.புகழேந்தி, மக்கள் நீதி மையத் தின் வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்டச் செயலாளர் ஷகிலா உள்ளிட்டோர் இரங் கல் உரையாற்றினர். இதன்பின் தோழர்  சீத்தாராம் யெச்சூரியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.