அவிநாசி, மே 23 – அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநா சிலிங்கேஸ்வரர் கோவிலில், குற்றச் சம்ப வத்தை காவல்துறை விசாரிக்கும்போதே, மதவாத அமைப்பினர், பொதுமக்களையும், வணிகர்களையும் அச்சுறுத்தும் நோக்கத்தில் மதவெறியைத் தூண்டும் நோக்கத்தில் செயல்படுவதை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் வன்மையாக கண்டித் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிர சித்தி பெற்றது. இக்கோவிலுக்குள் திங்க ளன்று இரவு புகுந்த நபர் கோவில் சிலைகள், உண்டியலை சேதப்படுத்தி, 63 நாயன்மார்க ளின் வஸ்திரங்களை கலைத்து வேல் மற்றும் பூஜை பொருட்களை திருடியது தெரியவந் தது. இச்சம்பவம் வெளியே தெரிந்தநிலை யில் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பரப ரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டனர். கோயிலில் புகுந்து சிலைகளை சேதப்ப டுத்தியவர்கள், திருட முயன்றவர்கள் யார் என்பது தெரியாத நிலையிலேயே, இந்து அமைப்பினர் மதவெறி நோக்கத்துடன் அவ சரகதியில் போராட்ட நடவடிக்கையில் ஈடு பட்டனர். இந்த நிலையில், அவிநாசி கோயி லுக்குள் புகுந்த மர்மநபர் அங்கிருந்து வெளி யேற முடியாத நிலையில், ராஜகோபுரத்தின் மேல் ஏறி பதுங்கி இருந்தார். இதையறிந்த காவல் துறையினர் மக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிடிபட்டவர், அவிநாசியை அடுத்த சாவக்கட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்துத்துவ மதவாத அமைப்பினர் கோவை - அவிநாசி நெடுஞ்சா லையில் உள்ள கடைகளை மூடும்படி கடைக்காரர்கள், வர்த்தகர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மதவாத அமைப்புகளின் நடவ டிக்கை அவிநாசி மக்களிடையே கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன்றிய செயலா ளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் வி. கோபால், இரா.முத்துசாமி, வி.கே.சுப்பிரம ணியம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றிய செயலாளர்
சுப்பிரமணியம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி அவிநாசி நகரத் தலைவர் ராஜ்குமார். உட்பட பலர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், அவிநாசி கோயிலில் நடைபெற்ற விரும்பத்தகாத அசம்பாவித நிகழ்வில் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மையைக் கண்டுபி டிப்பதற்கு முன்பாகவே, குறுகிய மதவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேன் டும் என்ற நோக்கத்தில் இந்துத்துவ மதவாத அமைப்புகள், இழிவான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. வர்த்தகர்களையும், பொது மக்களையும் அச்சுறுத்திய இவர்களது செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறை விசாரணை நடத்தி முதல் தக வல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பா கவே பிரச்சனையை திசை திருப்பி, பதட் டத்தை ஏற்படுத்தி ஆதாயம் அடைய வேண் டும் என்று இதுபோல் செயல்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் உறுதியான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல கோவில் பாதுகாப்பை பலப் படுத்தி எதிர்வரும் நாட்களில் இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க வும், மேலும் அவிநாசி அறநிலையத்துறை அதிகாரியின் அலட்சியப் போக்கு இனி மேல் தொடராமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதசார்பற்ற முற்போக்குக் கூட்டமி கட்சிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளன.