ஈரோடு, டிச.1- புளியம்பட்டி நகராட்சி சந்தை யில் இடிக்கப்பட்ட மாட்டிறைச்சி கடைகளை மீண்டும் செயல்பட அனு மதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி நிர் வாகத்துறை முதன்மை செயலர் மற் றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புளியம்பட்டி நகராட்சியில் வாரச்சந்தையில், இறைச்சிக்கடை கள் வாரச் சந்தை துவக்கப்பட்ட காலம் முதல் செயல்பட்டு வருகிறது. அங்கு மாட்டிறைச்சியும் அப்பொழு திருந்தே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துவக்கத்தில் சுமார் 20 கடைகள் இருந்தன. தற்போது சுமார் 8 கடைகள் நிரந்தரமாகவும், 3 கடை கள் விழாக்காலங்களிலும் செயல் படுகின்றன. ஆக மொத்தம் 11 கடை கள் செயல்பட்டுள்ளது. இந்த கடை களில் விற்கப்படும் மாட்டிறைச்சி இப் பகுதி எளிய பட்டியலின மக்களின் ஊட்டச்சத்து உணவாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் கடந்த 22.11.2022 அன்று அதிகாலை 5 மணிக்கு எவ் வித முன்னறிவிப்புமின்றி நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட இறைச்சி கடை களை இடித்து அகற்றி விட்டது. இது ஜனநாயக விரோத, சட்டவிரோத நட வடிகையாகும். இவர்கள் பட்டிய லின மக்கள் அதிலும், அருந்ததியி னர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால் அவர்களுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டியதில்லை என்ற ஆதிக்க மனோ நிலையில் இருந்து அறிவிப்பு கொடுக்காமல் அதிரடி யாக இக்கடைகள் அகற்றப்பட்டுள் ளன. இறைச்சி கடை வைத்திருப்ப வர்கள் மற்ற கடைகளைப் போல் சுதந் திரமாக கடை நடத்த உரிமை பெற்ற வர்கள் ஆவார்.
பொதுவாக அரசு புறம்போக்கு களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6 ன்படி நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்று ஆக்கிர மிப்பு அகற்றும் நடைமுறையை தமி ழக அரசும், நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசின் நகராட்சிகள் சட்டம் 1920 அனுமதிக்கிறது. மேற்கண்ட சட்டம் பிரிவு 182 (1) மற்றும் 182 (2) ன் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு கொடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற் றலாம் என்றும் மேற்கண்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சட்டங்கள் அனைத்திலும் ஆக்கிர மிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற வேண்டும் என்பது (Natural Justice) “இயற்கை நீதியாகும்.” மேற்கண்ட சட்டங்கள்படி இறைச் சிக் கடை நடத்திக் கொண்டிருப்பவர் களிடம் அறிவிப்பு கொடுத்து ஏன் இந்த இறைச்சிக்கடையை அகற்றக் கூடாது என்று விளக்கம் கேட்க வேண் டும் என்பது அரசியல் சட்ட கடமையா கும். அரசு ஊழியர்கள் அரசின் சட்டங் களை அமல்படுத்தும் போது பாரபட்ச மில்லாமல், சட்ட ரீதியாக செயல் பட்டு நோட்டீஸ் கொடுக்காமல் ஆக் கிரமிப்புக்களை அகற்றுவது சட்ட விரோதம் என்று பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புக்களும் உள்ளன.
நகராட்சி ஆணையர் இது போன்று நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறா தது எதேச்சதிகார நடைமுறையா கும். ஆணையர் அல்லது ஆக்கிர மிப்பை அகற்றும் அதிகாரம் பெற்ற அதிகாரி தன்னிச்சையாக, எவ்வித நோட்டீசும் கொடுக்காமல் மாட்டிறைச் சிக் கடைகளை அகற்றியது உள் நோக்கமுடையதும், சட்ட விதிக ளுக்கு எதிரானதுமாகும். ஆகவே தமிழ்நாடு தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டம் அல்லது நகராட்சி சட்டங்கள் மற்றும் இயற்கை நீதித் தத்துவத் திற்கு எதிராகச் செயல்பட்டு மாட்டி றைச்சி கடைகளை அதிரடியாக அகற் றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த பிரச்சனையில் சட்ட விரோ தமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு நகராட்சி அதிகாரி கள் ஏன் சட்டவிரோதமாகச் செயல் பட்டனர் என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றோம். இதற்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் வகையில் (Slaughter house) இறைச்சிக்கூடம் நகராட்சி யின் மூலம் கட்டிக் கொடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நிரந்தரமாக இறைச் சிக்கூடம் கட்டும் வரை (தற்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்காக) தற்காலிகமாக இடிக்கப்பட்ட இறைச் சிக் கடைகளை கட்டிக்கொடுக்கவும், இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப் பீடு வழங்கவும், நிரந்தரமாக இறைச் சிக்கூடம் கட்டும் வரை எவ்வித தடை யுமின்றி இக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.