திருப்பூர், அக். 5 - தமிழ்நாட்டு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்காத மத்திய அரசை கண்டிப்பதாக ஒருங்கிணைந்த சிறப்பா சிரியர்கள் சங்கம் கூறியுள்ளது. ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ. கௌதமன், பொதுச்செயலாளர் யசோதா, பொருளாளர் ரமேஷ் மற்றும் அமைப்புச் செயலாளர் குமரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் என 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசின் நிதி பங்களிப்போடு நடைபெறும் இத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த ரூ. 2165 கோடியில், முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 537 கோடியை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. புதியக் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தினால் தான், அதிலும் குறிப்பாக பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தினால் தான் நிதியை விடு விப்போம் என ஒன்றிய அரசு கூறுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நேரடியாக பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும், கல்வி அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் இணைந்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் ஆசிரியர்களின் ஊதியம் மட்டு மல்லாமல், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களும் முடங்கி உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத் தின் கீழ் ஆசிரியர்களின் ஊதியம், ஆசிரி யரல்லாத பணியாளர்களின் ஊதியம், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பள்ளி கட்டமைப்பு, மதிய உணவு, விளையாட்டு உபகரணங்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்ப டுகிறது. அதில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவில்லை என்றால் அதற்கான நிதியை மட்டும் நிறுத்தி வைத்து விட்டு ஏற்கனவே கொடுப்பதாக ஒப்புக்கொண்ட மற்ற பணிகளுக்கான நிதியை விடுவிப்பது தானே சரியாக இருக்கும். அதை விடுத்து ஒட்டு மொத்தமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியை முழுவதுமாக விடுவிக்காமல் நிறுத்தி வைப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கி டாத, ஒன்றிய அரசை கண்டித்தும் உடன டியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியா ளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் பங்கேற்க கேட்டுக் கொள்கிறது என தெரிவித் துள்ளனர்.