districts

img

கலைஞர் பெயர் சூட்டிய பேரூராட்சிக்கு முடிவுரையா? பேரூராட்சி ஊழியர்கள் அச்சம்

கோவை, மார்ச் 26- நகராட்சிகள், ஒரு ஊராட்சியைக்கூட பேரூராட்சிகளாக தரம் உயர்த்தாத நிலை யில், தொடர்ந்து பேரூராட்சிகள் நக ராட்சியாக உயர்த்தும் அரசின் நடவ டிக்கை, பேரூராட்சி துறையே இல்லாத நிலை உருவாகும் எனவும், பஞ்சாயத்து போர்டு என்பதை பேரூராட்சி என முன்னாள் முதல் வர் கலைஞர் பெயர் சூட்டிய இத்துறையே காணாமல் போகும் அபாயம் உள்ளதாக பேரூராட்சி ஊழியர்கள் கவலை தெரிவித்து ள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத்தினர் கூறுகையில், சமீப காலமாக பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்துகிற நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரி உள்ளிட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருப்ப தில்லை. ஆனையாளர் என்கிற ஒரு பதவி, அதற்குண்டான கட்டமைப்பு ஏற்படுத்தப் படும். அதேநேரத்தில், பேரூராட்சியாக இருக் கும்போது மக்களுக்கு கிடைக்கும் சேவை கள், நகராட்சியாக உயரும்போது அது கிடைப் பதில் என்பதே  நிதர்சனமான உண்மை. பிரச்ச னைகளுக்காக பொதுமக்கள் நகராட்சி ஆணையரை சந்திப்பதே குதிரை கொம்பா கத்தான் இருக்கிறது என்பதே அனுபவம். பேரூராட்சிகள், நகராட்சியாக அறிவிப்பு என் பது, மக்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்ப டுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப் படுகிறது. இதனால், மக்களுக்கு கூடுத லான எந்த நன்மையும் ஏற்பட போவ தில்லை.  100 ஆண்டுகளுக்கு மேல், நாடு விடு தலை அடைவதற்கு முன்பிருந்த உள்ளாட்சி அமைப்பு “பஞ்சாயத் போர்டு” என்ற பெயரில் இயங்கியது. சுதந்திரத்திற்கு பின் “பட்டணம் பஞ்சாயத்” என இயங்கி வந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் பேரூராட் சிகள் என்ற பெயர் சூட்டப்பட்டு, ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 1996ஆம் ஆண்டு வரை  இயங்கி வந்தது.1996ஆம் ஆண்டு நகர்  பாலிகா சட்ட அமலில் பேரூராட்சிகள் நக ராட்சி நிர்வாக துறையின் கீழ் மாற்றப்பட்டு  651 பேரூராட்சிகள் இருந்தது.

பேரூராட்சிகள் குறைந்த பணியமைப்பு கொண்டு, அரசியல் அமைப்பு சட்டம் வழங் கிய உரிமைபடி 14 சேவைகளை செய்து வரு கிறது. பேரூராட்சிகளின் நிர்வாகம் அமைப்பு சிறியது. மக்கள் தொகையில் 10 சதவி கிதற்கு மேல் மக்களின் அடிப்படை தேவையை அரசு திட்டங்கள் மூலம்  பேரூராட்சி நிர்வா கம் செயல்படுத்தி வருகிறது. 1996க்கு பின் ஒரு புது பேரூராட்சிகள் கூட நகராட்சி நிர்வாக துறை உருவாக்கவில்லை. 651 இருந்த பேரூராட்சி எண்ணிக்கை, தற் போது, 490 ஆக குறைந்துள்ளது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் போராடி பெற்ற பல பணியிடங்கள் இழந்தோம். குறிப்பாக, 62 சிறப்பு நிலை (தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் நிகரான பதவி) பெற்றதில், சென்ற ஆண்டு 38 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்படும்போது, பெருமளவில் சிறப்பு நிலை பதவி பறிபோய் பதவி உயர்வு பாதிக்கப் பட்டுள்ளது.

பேரூராட்சியிலிருந்து தரம் உயர்ந்த நகராட்சியில் பல பணியிடங்கள் திருப்பி பேரூராட்சி துறைக்கு அனுப்புவதில், உரிய பணியிடங்கள் இல்லாமல் காத்திருக் கின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் ஏராள மாக உள்ளது. இந்நிலையில், தற்போது சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்ற அறி விப்பு வர உள்ளதாக தெரிகிறது. பேரூராட் சிகள் எண்ணிக்கை அதிகரிக்க அறிவிப் புகள் வெளியிட அறிவிப்பு வழங்கியபின், வளர்ந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இழந்த பதவிகளை பேரூராட்சி துறை யில் உருவாக்கி பேரூராட்சிகள் துறையை வலுப்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு முதன்மை செயலாளரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளோம்.  முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் மாதங் களில் வர உள்ளது. அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அனைத்து மக்களுக்குமான திட்டங் களாகவே இருந்தது என்பது உண்மை. அது போல பேரூராட்சி என்கிற பெயர் சூட்டி, அதனை வலுப்படுத்துவதில் பெரும் அக்க றை எடுத்துக் கொண்டவர் கலைஞர். அவர் வழியிலான அரசு, புதிய பேரூராட்சிகளை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் சேவைக்கான கதவுகளை திறந்து வைக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு என்றனர்.