சேலம் மாவட்டம், அரியாக்கவுண்டம்பட்டியில் தோழர் சீத்தா ராம் யெச்சூரி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி. பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு, அங்கு பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர் யெச்சூரியின் உருவப் படத்திற்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.