districts

img

தோழர் ப.வில்வம் படத் திறப்பு விழா

கோவை, ஜூன் 11- கோவை, வேலாண்டிபாளையத்தில்   தோழர் ப.வில்வம் அவர்களின் படத்திறப்பு  விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி  ஞாயிறன்று நடைபெற்றது.  தோழர் ப.வில்வம், கோவை மக்கள்  எல்லோராலும் அறியப்பட்ட மார்க்சிய- பெரி யாரிய- அம்பேத்கர் கருத்துக்களை முன்னெ டுத்தவர். பல்வேறு சமூக பொறுப்புகளில் முன் நின்று பணியாற்றியவர். இவர் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  அன்னாரின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் நிகழ்வு ஞாயிறன்று வேலாண்டி பாளையத்தில் வி.ஆர்.கே. அரங்கில் நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு, முன்னாள் மாநகர மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் தலைமை ஏற்றார். குத்தூசி குருசாமி படிப்ப கத்தின் பொறுப்பாளர் சா.கதிரவன் வர வேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன், தோழர் ப.வில்வம் அவர் களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து  உரையாற்றினார்.  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணைத் தலைவர் ப.பா.ரமணி, வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன், திராவிட தமிழர் கட்சி தலைவர் சி.வெண்மணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செய லாளர் அசரப் அலி, கூமெ திரைப்பட இயக் கத்தின் ஒடியன் லட்சுமணன், திமுக மாமன்ற  உறுப்பினர்கள் எம்.கே பிரவீன் ராஜ், பி. மல்லிகா, என்.சம்பத், வேலாண்டிபாளையம் பகுதி கழகச் செயலாளர் ஏ.எம் கிருஷ்ண ராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினை வேந்தல் உரை நிகழ்த்தினர்.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பேரூர் நகர குழு உறுப்பி னர்கள், வேலாண்டிபாளையம் கட்சிக் கிளை  செயலாளர் பாபு, சிஐடியு இன்ஜினியரிங்  அரங்க மாவட்ட செயலாளர் சி.துரைசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கல்வியாளர் காந்தி ஜெயந்தி ஒருங்கிணைத்தார். முடிவில், ஆ. நந்தகுமார் நன்றி கூறினார்.