நாமக்கல், ஜன.8- சுதந்திரப் போராட்ட வீரரும், திருச்செங்கோடு சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான மோளியப் பள்ளி வீ.ராமசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, சார்பில் தினத்தன்று மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன் றியம், மோளியப்பள்ளி கிராமத்தில் 8.1.1925 ஆம் தேதி பிறந்தவர் தோழர் வீ.ராமசாமி. எளிய வாழ்க்கை முறை யும், குடிப்பழக்கத்தை எதிர்த்தும், தலித் மற்றும் உழைப்பாளி மக்கள் மீது நேசமும் கொண்ட முறையில் வளர்ந்தார். விடுதலைப் போராட்டத் தில் தன்னை இணைத்துக் கொண்ட வர். பின்னாளில் உழைப்பாளி மக்க ளுக்காக போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். இந்நி லையில், இருவடைய நூற்றாண்டு நிறைவு மற்றும் பிறந்தநாளை முன் னிட்டு, அனைத்து பகுதி மக்களுக் கும் பல்வேறு வகையான மரக்கன்று கள் வழங்கும் விழா புதனன்று நடை பெற்றது. எலச்சிபாளையத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளை யம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி. தேவராஜன் வரவேற்றார். பொதுமக் களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ந.வேலுசாமி, எஸ்.தமிழ் மணி, சு.சுரேஷ், முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் பி.சுரேஷ், கே.எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் பி.தங்கராஜ், ஏலூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதி மணி உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், மூத்த தோழர் எஸ்.பெரியசாமி நன்றி கூறினார். முன்னதாக, தோழர் வீ.ராமசாமி யின் நூற்றாண்டு நிறைவை முன் னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியேற்றும் விழா மற்றும் கட்சி அலுவலக வளாகத்தில் நினைவு மரக் கன்றுகளை நடவு செய்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.