districts

img

தோழர் எம்.தமிழ்செல்வன் காலமானார்

திருப்பூர், ஆக.5- திருப்பூரில் 70க்கும் மேற்பட்ட முறை  ரத்த தானம் செய்தவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எம். தமிழ்செல்வன் ஞாயிற்றுக்கிழமை காலமா னார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு  உறுப்பினரும், முன்னாள் வாலிபர் சங்க  செயலாளருமான எம்.தமிழ்செல்வன் ஞாயிற்றுக்கிழமை மரணித்தார். இதைய டுத்து, திங்களன்று அய்யம்பாளையம் மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற் றது. இதைதொடர்ந்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  கணக்கம்பாளை யம் கிளை செயலாளர் செல்வநாதன் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் பேசுகையில், திருப்பூ ரில் அதிக முறை ரத்த தானம் செய்த வர்களில் ஒருவர் தோழர் தமிழ்செல்வன். யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும் உடன டியாக இரத்தம் வழங்கியவர். மருத்து வமனை சுத்தப்படுத்துவது உட்பட எண்ணற்ற சமூக பணிகளில் தொடர்ச்சி யாக பங்கேற்றவர். மக்கள் பிரச்சனை களுக்காக தொடர்ந்து போராடும் குணம்  படைத்தவர். உதவி மனப்பான்மை கொண் டவர். அவரின் இழப்பு குடும்பத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் இழப்புபல்ல. இப்பகுதி மக்களுக்கே பேரிழப்பு என்றார். இதைதொடர்ந்து, மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, கணக்கம்பாளையம் ஊராட்சிமன்றத் தலை வர் பி.சண்முகசுந்தரம், தமிழக கேபிள்  ஆபரேட்டர்கள் சங்க ஊத்துக்குளி தாலுகா  செயலாளர் வி.எம்.அண்ணாதுரை, திமுக  நிர்வாகி அய்யம்பாளையம் வெங்கடா சலம்  ஆகியோர் தமிழ்செல்வன் பணிகள்  குறித்து புகழாரம் சூட்டிப் பேசினர்.