districts

img

தோழர் கா.மு.காளியப்பன் படத்திறப்பு விழா

நாமக்கல், நவ. 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நாமக்கல் நகர முன் னாள் செயலாளரும், நாமக் கல் மாவட்ட குழு உறுப்பின ருமான மறைந்த முதுபெரும்  தோழர் கா.மு.காளியப்ப னின் படத்திறப்பு விழா, நடைபெற்றது.  நாமக்கல் கே.கே.நினைவரங்கத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, நாமக்கல் பிரதேச  அமைப்புக்குழு கன்வீனர் என்.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஜெயமணி வரவேற்றார். தீக்கதிர்  டிஜிட்டல் பதிப்பு பொறுப்பாசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப் பினருமான எம்.கண்ணன் பங்கேற்று, தோழர்  கா.மு.காளியப்பன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.முடிவில், இ.எம்.ராஜேந் திரன் நன்றி கூறினார். முன்னதாக, மறைந்த  மூத்த தோழர் கா.மு.காளியப்பன் குடும்பத் தாரை, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கௌர விக்கப்பட்டது.