districts

img

தோழர் கே.திருவேங்கடம் நினைவு ஜோதி பயணம் விழுப்புரத்தில் புறப்பட்டது

விழுப்புரம், ஜூலை 16- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்  சம்மேளனம் (சிஐடியு) 14ஆவது மாநில  மாநாட்டையொட்டி ஒன்றுபட்ட தென்னார் காடு மாவட்ட தொழிலாளர்களின் தலைவ ரும், குறிப்பாக விழுப்புரம் அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் விடிவெள்ளி யாகத் திகழ்ந்த தோழர் கே.திருவேங்கடம் நினைவு ஜோதி பயணம் விழுப்புரம் அரசு  போக்குவரத்துக் கழக தலைமை அலுவல கம் முன்பு இருந்து புறப்பட்டது. தோழர் கே.திருவேங்கடம் திருமணம் கூட  செய்து கொள்ளாமல் தொழிலாளர்களுக்கா கவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ராணு வப் பணியை தொடர்ந்து சர்வேயர் பணியை யும் ராஜினாமா செய்து விட்டு தொழிலா ளர்களுக்காக பணியாற்றினார். ஏராளமான  போராட்டங்களில் பங்கேற்ற அவர் ஒரு முறை விழுப்புரம் மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை தொழிலா ளர்களின் போராட்டத்தில் பங்கேற்ற போது  ரவுடிகளின் தாக்குதலால் ஒரு கண் பார்வையை இழந்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சிஐ டியு சங்கத் தலைவராக இருந்த போது தொழி லாளர்களின் கோரிக்கைகளை டெல்லி வரை எடுத்துச் சென்று வாதிட்டு இரண்டு  முறை ஒப்பந்தம் போட்டார். மேலும் அவர்  ஆரோவுட், ஆரோஷிகா, சாரம் நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி பல்வேறு கோரிக்கைகளை வென்றெ டுத்தவர்.  சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 14ஆவது மாநில மாநாட்டை யொட்டி தமிழகம் முழுவதும் இருந்து 50 தொழிற்சங்க தலைவர்களின் நினைவாக ஜோதி பயணம் புறப்படுகிறது. அதன் ஒரு  பகுதியாக விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஆர். மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செய லாளர் எச்.ரகோத்தமன் வரவேற்றார். திரு வேங்கடத்தின் நினைவு ஜோதியை சிஐடியு  விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். முத்துக்குமரன் பயணக் குழுவிடம் வழங்கி துவக்கி வைத்தார். சம்மேளனக்குழு உறுப்பி னர் ஆர்.தெய்வீகன், துணைப்பொதுச் செய லாளர்கள் ஏ.ஏழுமலை, பி.மணி, பொருளா ளர் கே.சுந்தரபாண்டியன், ஓய்வு பெற்றோர்  சங்க மாநில துணைத்தலைவர் ஏ.சகாதேவன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.