திருப்பூர், ஜூலை 21- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர முன்னாள் செயலாளர் பி.முருகேசன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரா கவும், சிஐடியு பஞ்சாலை மற்றும் பொது தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் செயல்பட்ட பி.முருகேசன் கடந்த 2020 ஆம் ஆண்டு கால மானார். அவரது நினைவு தினமான வியாழக் கிழமை கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக தோழர் பி.முருகேசன் உருவப்படம் வைக்கப் பட்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட் டது. கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், வேலம்பாளையம் நகரச் செயலாளரு மான ச.நந்தகோபால் மலர் அஞ்சலி செலுத்தி பி.முருகேசன் நினைவுகளை பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.காளியப்பன், தெற்கு ஒன்றிய செய லாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகர செயலா ளர் டி.ஜெயபால், சிஐடியு பஞ்சாலைத் தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி. ஈஸ்வரமூர்த்தி, தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன், பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், சாலை யோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி. பாலன், மூத்த தோழர்கள் வி.பி.சுப்பிரமணி யம், என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திர ளானவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மாலை தியாகி பழனிசாமி நகர் கிளை அலுவலகம் முன்பாக பி.முருகே சன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது.